ஸ்டாலின் அறிவிப்பைக் கண்டு பயந்து முதல்வர் பழனிசாமி பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்தார்: தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன் பேட்டி!

பொள்ளாச்சி: தி.மு.க.தலைவர் ஸ்டாலினின் அறிவிப்பைக் கண்டு பயந்து முதல்வர் பழனிசாமி பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்துள்ளார் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.


பொள்ளாச்சி: தி.மு.க.தலைவர் ஸ்டாலினின் அறிவிப்பைக் கண்டு பயந்து முதல்வர் பழனிசாமி பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்துள்ளார் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.



பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து, ஏராளமான இளைஞர்கள் மாற்று கட்சிகளிலிருந்து விலகி தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மடத்துக்குளம் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விலகி தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

இதையடுத்து எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-



தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பெ, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதைக் கண்டு பயந்து போன எடப்பாடி பழனிசாமி, மக்களைச் சந்தித்து வாக்கு கேட்க முடியாமல், தற்போது இந்த விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் நிலைப்பாடு இல்லாமல் உள்ளனர். யாரை வேண்டுமென்றாலும் தலைவராக ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் சசிகலாவின் நேரடி தேர்வு மூலம் களத்திற்கு வந்தவர்கள். அவர்களின் நிலைப்பாடு என்னவென்பது வரும் நாட்களில் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...