கோவை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடத்தை குறைந்த விலைக்கு முறைகேடாக விற்பனை செய்த அ.தி.மு.க. அரசைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் செய்த 300-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடத்தை குறைந்த விலைக்கு முறைகேடாக விற்பனை செய்த அ.தி.மு.க. அரசைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் செய்த 300-க்கும் மேற்பட்டதி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடத்தை குறைந்த விலைக்கு முறைகேடாக விற்பனை செய்த அ.தி.மு.க. அரசு மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைக் கண்டித்து கோவை குளத்துப்பாளையத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி வழங்காததால், 100-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். சுகுணாபுரம் பகுதி தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் பேசினார். அப்போது அவர் இ-டெண்டர் மூலம் வீட்டுவசதி வாரிய வீடுகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து முறைகேட்டில் வேலுமணி ஈடுபட்டுள்ளார்.

இதேபோல், சூயஸ் நிறுவனத்துக்கு குடிநீர் விநியோகத்தை கொடுத்துவிட்டு சிறுவாணி தண்ணீர் மக்களுக்கு வழங்காமல் ஏமாற்றுகின்றனர். இதில், பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என்று கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைக் கண்டித்து பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.
காவல்துறை அனுமதியை மீறி தி.மு.க.வினர் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.