கோவை: மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள படிக்கட்டில் காட்டு யானைகள் திடீரென குடும்பம் சகிதமாக வந்து முகாமிட்டு சுற்றித் திரிந்தன. இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயந்து ஓடினர். 1.30 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு விரட்டியடிக்கப்பட்டது.
கோவை: மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள படிக்கட்டில் காட்டு யானைகள் திடீரென குடும்பம் சகிதமாக வந்து முகாமிட்டு சுற்றித் திரிந்தன. இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயந்து ஓடினர். 1.30 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு விரட்டியடிக்கப்பட்டது.
மருதமலை படிக்கட்டு ஓரம் நேற்று திடீரென காட்டு யானைகள் முகாமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து படிக்கட்டுகள் வழியாகவும், சாலை வழியாகவும் பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று பிற்பகல் 2 மணிக்கு பெண் யானைகள் மற்றும் ஒரு குட்டியுடன் காட்டு யானைகள், படிக்கட்டு பகுதிக்கு வந்துள்ளன. அப்போது அந்த வழியாகச் சென்ற பக்தர்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த வனத்துறையினர், அடிவாரத்திலிருந்து படிக்கட்டுகள் வழியாகவும், சாலை வழியாகவும் பக்தர்கள் வருவதைத் தடுத்து நிறுத்தினர். அதன்பின், காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். படிக்கட்டு மற்றும் சாலைப் பகுதிக்கு இடையிலான பள்ளத்தில் காட்டு யானைகள் முகாமிட்டன. சுமார் 1.30 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள், வனத்துறையினர் விரட்டினர்.
கோடைக்காலம் துவங்கி உள்ளதால், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால் பக்தர்கள், படிக்கட்டுகள் மற்றும் சாலைகளில் செல்லும்போது கவனமாக இருக்குமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், கடை வைத்துள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மலையடிவாரப் பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து இப்பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
மருதமலை படிக்கட்டு ஓரம் நேற்று திடீரென காட்டு யானைகள் முகாமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து படிக்கட்டுகள் வழியாகவும், சாலை வழியாகவும் பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று பிற்பகல் 2 மணிக்கு பெண் யானைகள் மற்றும் ஒரு குட்டியுடன் காட்டு யானைகள், படிக்கட்டு பகுதிக்கு வந்துள்ளன. அப்போது அந்த வழியாகச் சென்ற பக்தர்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த வனத்துறையினர், அடிவாரத்திலிருந்து படிக்கட்டுகள் வழியாகவும், சாலை வழியாகவும் பக்தர்கள் வருவதைத் தடுத்து நிறுத்தினர். அதன்பின், காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். படிக்கட்டு மற்றும் சாலைப் பகுதிக்கு இடையிலான பள்ளத்தில் காட்டு யானைகள் முகாமிட்டன. சுமார் 1.30 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள், வனத்துறையினர் விரட்டினர்.
கோடைக்காலம் துவங்கி உள்ளதால், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால் பக்தர்கள், படிக்கட்டுகள் மற்றும் சாலைகளில் செல்லும்போது கவனமாக இருக்குமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், கடை வைத்துள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மலையடிவாரப் பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து இப்பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.