சிறு குறு தொழில் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு: தற்கொலை செய்த கோவை தொழில்முனைவோருக்கு ஆறுதல் கூறிய ஜி.ராமகிருஷ்ணன் அரசுக்கு கோரிக்கை!

கோவை: கோவையில் தற்கொலை செய்து கொண்ட தொழில்முனைவோர் ஏசுராஜ் குடும்பத்துக்கு மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆறுதல் கூறினார். அப்போது அவர் மத்திய மாநில அரசுகள் சிறு குறு தொழில் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.



கோவை: கோவையில் தற்கொலை செய்து கொண்ட தொழில்முனைவோர் ஏசுராஜ் குடும்பத்துக்கு மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆறுதல் கூறினார். அப்போது அவர் மத்திய மாநில அரசுகள் சிறு குறு தொழில் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

கோவை பீளமேடு பகுதியில் வசிப்பவர் ஏசுராஜ். இவர் இருகூர் பகுதியில் தனியாக இன்ஜினீயரிங் தொழிற்கூடம் நடத்தி வந்தார். கொரோனா காலத்தில் போதுமான ஜாப் ஆர்டர் கிடைக்காததால் ஏசுராஜ் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் மனமுடைந்த ஏசுராஜ் கடந்த 28-ஆம்தேதி தனது நிறுவனத்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுயமாக தொழில் செய்து முன்னேற வேண்டும் என்கிற உந்துதலோடு தொழில் துவங்கியவரின்வாழ்க்கையை கொரோனா பேரிடர் புரட்டிப்போட்டதால் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கோவை மாவட்ட தொழில்முனைவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 



இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக கோவை வந்த மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மறைந்த ஏசுராஜ் மனைவி சுகுணாதேவி, அவரது தாயார் மற்றும் பிள்ளைகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசும்போது, `கொரோனா பேரிடர் காலத்தையொட்டிய ஊரடங்கில் சொந்த ஊரில் உள்ள தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. சிறு குறு தொழில்முனைவோரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு ஏசுராஜின் தற்கொலையே சாட்சியாக உள்ளது.

மத்திய மாநில அரசுகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள், கடன் தள்ளுபடி அறிவித்து வழங்குகிறது. ஆனால் சிறு, குறு தொழில்களை மட்டும் அம்போவென விட்டுவிட்டது. இதன் காரணமாகவே இதுபோன்ற துயரங்கள் ஏற்பட்டுள்ளன. ஏசுராஜ் போன்ற தொழில்முனைவோரின் தற்கொலைக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.

தேர்தல் காலத்தையொட்டி தொழில்முனைவோரைச் சந்தித்து அக்கறையுள்ளவர்கள்போல் நடிப்பதற்கு மாறாக இப்போதாவது மத்திய மாநில அரசுகள் சிறுகுறு தொழில் வளர்ச்சிக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதற்கும், வங்கிக் கடன் தள்ளுபடி, வங்கி தவணை காலம் நீட்டிப்பு போன்ற தொழில்முனைவோரின் கோரிக்கைகளை செவிகொடுத்து நிறைவேற்றிட வேண்டும். இதுவே லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும். சிறு, குறு தொழிலை பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக இருக்கும்' என்றார்.

முன்னதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடனான சந்திப்பில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் பீளமேடு நகர செயலாளர் கே.பாண்டியன், கட்சி நிர்வாகிகள் ஜோதிபாசு, பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...