தேமுதிக வாக்கு சதவீதம் குறையவில்லை; கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது -பொள்ளாச்சியில் விஜயபிரபாகரன்.
கோவை: கோவை தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் 2021 தேர்தல் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்பொள்ளாச்சி - பல்லடம் சாலையில்உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது நேற்று நடைபெற்றது.
தேமுதிக மாவட்ட செயலாளர் பனப்பட்டி தினகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விஜயகாந்தின் இளைய மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு பேசினார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, தேமுதிகவின் வாக்கு சதவீதம் குறையவில்லை என்றும், அரசியலில் தோல்வி நிரந்தரம் இல்லை என்று தெரிவித்தார். மேலும், சூழல் மாறும் பொழுது தேமுதிக மாபெரும் இயக்கமாக திகழும் எனவும் அதிமுக-திமுக கூட்டணியை பொருத்தவரை பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது, எனவும்
இதுகுறித்து கட்சித் தலைமை தான் முடிவு செய்யும், என்றார்.

அதிமுக ஆட்சியில் நிறையும் உள்ளது, குறையும் உள்ளது எனவும், தற்போது விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார். பின்னர், மேடையில் பேசும்போது தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது, தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தேமுதிக மாவட்ட செயலாளர் பனப்பட்டி தினகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விஜயகாந்தின் இளைய மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு பேசினார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, தேமுதிகவின் வாக்கு சதவீதம் குறையவில்லை என்றும், அரசியலில் தோல்வி நிரந்தரம் இல்லை என்று தெரிவித்தார். மேலும், சூழல் மாறும் பொழுது தேமுதிக மாபெரும் இயக்கமாக திகழும் எனவும் அதிமுக-திமுக கூட்டணியை பொருத்தவரை பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது, எனவும்
இதுகுறித்து கட்சித் தலைமை தான் முடிவு செய்யும், என்றார்.
அதிமுக ஆட்சியில் நிறையும் உள்ளது, குறையும் உள்ளது எனவும், தற்போது விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார். பின்னர், மேடையில் பேசும்போது தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது, தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.