நாளை சசிகலா தமிழகம் வருகை: மேளதாளம் முழங்க வரவேற்பளிக்க காத்திருக்கும் அமமுக தொண்டர்கள்..!
சென்னை:
நாளை தமிழகம் திரும்பும் சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட உள்ளது. அ.தி.மு.க அலுவலகம், ஜெயலலிதா சமாதியில் காவல்துறை பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. மேலும், சசிகலாவை வரவேற்க சென்னையின் பெரும்பாலான இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து பெங்களூருலிருந்து, சென்னைக்கு வரும் சசிகலாவிற்கு, வழிநெடுக 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சென்னை வரவிருக்கும் சசிகலாவை அழைத்து வர, அமமுக பொதுசெயலாளர் தினகரன், அமமுக நிர்வாகி பழனியப்பன் உள்ளிட்டோர் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர்.
சென்னையின் முக்கிய வழித்தடங்களில் குறிப்பாக போரூர், கிண்டி, கத்திப்பாரா, தியாகராய நகர் வரை 32 இடங்களில் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாளை சசிகலா சென்னை வரும் போது பெரிய அளவில் அமமுகவினர் திரள்வார்கள் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
இதற்கிடையே, அதிமுக அலுவலகம் உள்ள அவ்வை சண்முகம் சாலை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சமாதி உள்ளிட இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாளை தமிழகம் திரும்பும் சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட உள்ளது. அ.தி.மு.க அலுவலகம், ஜெயலலிதா சமாதியில் காவல்துறை பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. மேலும், சசிகலாவை வரவேற்க சென்னையின் பெரும்பாலான இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து பெங்களூருலிருந்து, சென்னைக்கு வரும் சசிகலாவிற்கு, வழிநெடுக 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சென்னை வரவிருக்கும் சசிகலாவை அழைத்து வர, அமமுக பொதுசெயலாளர் தினகரன், அமமுக நிர்வாகி பழனியப்பன் உள்ளிட்டோர் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர்.
சென்னையின் முக்கிய வழித்தடங்களில் குறிப்பாக போரூர், கிண்டி, கத்திப்பாரா, தியாகராய நகர் வரை 32 இடங்களில் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாளை சசிகலா சென்னை வரும் போது பெரிய அளவில் அமமுகவினர் திரள்வார்கள் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
இதற்கிடையே, அதிமுக அலுவலகம் உள்ள அவ்வை சண்முகம் சாலை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சமாதி உள்ளிட இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.