கோவை: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிந்து போலீசாரால் தேடப்பட்டு வந்த இந்து முன்னணி பொதுச் செயலாளர் ஜெய்சங்கரை சிங்காநல்லூர் போலீசார் இன்றுகைது செய்தனர்.
கோவை: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிந்து போலீசாரால் தேடப்பட்டு வந்த இந்து முன்னணி பொதுச் செயலாளர் ஜெய்சங்கரை சிங்காநல்லூர் போலீசார் இன்றுகைது செய்தனர்.
கோவையில் கடந்த 1-ஆம் தேதி மாலை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரே பா.ஜ.க. சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் பேசினார். அப்போது அவர் கல்யாணராமன் பேசியதை சுட்டிக்காட்டி பேசினார்.
இதைத்தொடர்ந்து நபிகள்நாயகம் குறித்து ஜெய்சங்கர் அவதூறாக பேசியதாகக்கூறி இஸ்லாமிய அமைப்புகள் பலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் ஜெய்சங்கரை கைது செய்ய வலியுறுத்தி காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரிடம் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து சிங்காநல்லூர் போலீசார் ஜெய்சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து அவரைத்தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை ஜெய்சங்கரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர். ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டதையடுத்து இந்து முன்னணியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் கடந்த 1-ஆம் தேதி மாலை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரே பா.ஜ.க. சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் பேசினார். அப்போது அவர் கல்யாணராமன் பேசியதை சுட்டிக்காட்டி பேசினார்.
இதைத்தொடர்ந்து நபிகள்நாயகம் குறித்து ஜெய்சங்கர் அவதூறாக பேசியதாகக்கூறி இஸ்லாமிய அமைப்புகள் பலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் ஜெய்சங்கரை கைது செய்ய வலியுறுத்தி காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரிடம் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து சிங்காநல்லூர் போலீசார் ஜெய்சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து அவரைத்தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை ஜெய்சங்கரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர். ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டதையடுத்து இந்து முன்னணியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.