திருப்பூரில் நாளை காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ சார்பில்‌ மரம் நடும் நிகழ்ச்சி: பொதுமக்கள், இளைஞர்களுக்கு அழைப்பு!

திருப்பூர்: காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ சார்பில்‌ திருப்பூரில்‌ நாளை நடக்கும்‌ 'மரம்‌ நட விரும்பு' நிகழ்ச்சியில்‌ பொதுமக்கள்‌ மற்றும்‌ இளைஞர்கள்‌ பங்கேற்று மரம்‌ நடலாம்‌ என்று கூறப்பட்டுள்ளது.


திருப்பூர்: காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ சார்பில்‌ திருப்பூரில்‌ நாளை நடக்கும்‌ 'மரம்‌ நட விரும்பு' நிகழ்ச்சியில்‌ பொதுமக்கள்‌ மற்றும்‌ இளைஞர்கள்‌ பங்கேற்று மரம்‌ நடலாம்‌ என்று கூறப்பட்டுள்ளது.

மண்ணின்‌ வளத்தையும்,‌ விவசாயிகளின்‌ வருமானத்தையும்‌ அதிகரிப்பதற்காக மரம்‌ சார்ந்த விவசாயத்தை காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ ஊக்குவித்து வருகிறது. இம்முயற்சி தமிழக விவசாயிகளிடம்‌ சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன்‌ காரணமாக, தமிழகம்‌ முழுவதும்‌ காவேரி கூக்குரல்‌ இயக்கத்தின்‌ வழிகாட்டுதலுடன்‌ தங்கள்‌ நிலங்களில்‌ மதிப்புமிக்க மரங்கள்‌ நடும்‌ பணியை விவசாயிகள்‌ மிகுந்த ஆர்வத்துடன்‌ செய்து வருகின்றனர்‌.

இப்பணியில்‌ விவசாயிகளுக்கு உதவும்‌ வகையிலும்‌ பொதுமக்களிடம்‌ சுற்றுச்சூழல்‌ குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும்‌ விதமாகவும்‌ `மரம்‌ நட விரும்பு' என்ற நிகழ்ச்சி வெவ்வேறு மாவட்டங்களில்‌ நடத்தப்பட்டு வருகிறது. அதன்‌ ஒருபகுதியாக, திருப்பூர்‌ மாவட்டம்‌ பல்லடம்‌ தாலுகா, இச்சப்பட்ட கிராமத்தில்‌ உள்ள விவசாயி சிவசாமி நிலத்தில்‌ மரம்‌ நடும்‌ பணி வரும்‌ நாளை நடைபெற உள்ளது. 9 ஏக்கர்‌ பரப்பில்‌ நடக்கும்‌ இப்பணியில்‌ சுற்றுச்சூழல்‌ மீது ஆர்வமுள்ள பொதுமக்கள்‌ மற்றும்‌ இளைஞர்கள்‌ பங்கேற்று மரம்‌ நடலாம்‌. விருப்பம்‌ உள்ளவர்கள்‌ 94425 90016 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்‌.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...