பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர பரிந்துரை: கோவை வணிகவரித்துறை அதிகாரி தகவல்!

கோவை: கோவையில் நேற்று மாலை வணிகவரித்துறை அலுவலகத்தில் ஜி.எஸ்.டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கருத்து கேட்பின்போது, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.


கோவை: கோவையில் நேற்று மாலை வணிகவரித்துறை அலுவலகத்தில் ஜி.எஸ்.டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கருத்து கேட்பின்போது, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) சட்டம் தொடர்பாக பட்டயக் கணக்காளர்கள், வணிகப்பிரதிநிதிகள், வரி ஆலோசகர்களுடனான கூட்டம் கோவை வணிக வரித்துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, வணிக வரித்துறை கூடுதல் கமிஷனர் பழனி பேசியதாவது:-

வரி ஏய்ப்பை குறைப்பதில் ஜி.எஸ்.டி. முக்கியப்பங்கு வகிக்கிறது. இறக்குமதி மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் நமது உள்ளூர் பொருட்களை சந்தைப்படுத்துவதும், உள்நாட்டு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. வரி விதிப்பு முறையை நிர்வகிக்கும் பணியும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களில் பெறப்படும் கருத்துகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வரியில் மாற்றம் தொடர்பாக பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மீதான ஐ.டி.சி., வரவு, மாநிலங்கள் எடுத்துக்கொள்ள அனுமதிப்பது தொடர்பான கருத்துகள் அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஜி.எஸ்.டி. கவுன்சிலில் பரிந்துரைக்கப்படும். அதேபோல், ரத்து செய்யப்பட்ட பதிவுச் சான்றினை திரும்பப்பெறுதல் உள்ளிட்ட கருத்துக்கள் அரசிடம் கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...