கோவை: திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு பாசி என்கின்ற நிறுவனம் பொதுமக்களிடம் 870 கோடி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் நேற்று 8 பேர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவை: திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு பாசி என்கின்ற நிறுவனம் பொதுமக்களிடம் 870 கோடி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் நேற்று 8 பேர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட, 'பாசி போரக்ஸ்' என்ற நிதி நிறுவனம், 2011-ம் ஆண்டு, ரூ.870 கோடி மோசடி செய்த வழக்கில் அதன் நிறுவன இயக்குனர்கள் கதிரவன், மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை, கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக 2013-ம் ஆண்டு சாட்சி விசாரணை துவங்கியது. மொத்தமுள்ள 1,430 சாட்சிகளில் 500 பேரிடம் மட்டும் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எட்டு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட, 'பாசி போரக்ஸ்' என்ற நிதி நிறுவனம், 2011-ம் ஆண்டு, ரூ.870 கோடி மோசடி செய்த வழக்கில் அதன் நிறுவன இயக்குனர்கள் கதிரவன், மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை, கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக 2013-ம் ஆண்டு சாட்சி விசாரணை துவங்கியது. மொத்தமுள்ள 1,430 சாட்சிகளில் 500 பேரிடம் மட்டும் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எட்டு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.