கோவையில், போக்குவரத்து விதிமீறல் தடுக்க 171 கண்காணிப்பு கேமராக்கள்: உதவி ஆணையர் தகவல்!

கோவை: கோவையில், போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க 171 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து உதவி ஆணையர் தெரிவித்தார்.


கோவை: கோவையில், போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க 171 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து உதவி ஆணையர் தெரிவித்தார்.

கோவை மாநகரில் 32-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா கோவில் சந்திப்பு பகுதியில் கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் ராஜ்கண்ணா கூறியதாவது:- விழிப்புணர்வின் ஒரு பகுதியாக வீதி நாடகம் நடத்தப்பட்டது. சித்திரகுப்தன், எமதர்மன் இடையே உரையாடல் குறித்த வீதி நாடகம் நடத்தப்பட்டது. இதில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணிவதன் அவசியம், சிக்னல்களை மதிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தானியங்கி முறையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிப்பது பரீட்சார்த்த முறையில் நடந்து வருகிறது. பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைபிடித்து விபத்துக்களை குறைக்க உதவ வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் விபத்து குறைந்து வருகிறது. போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க கோவையில் 171 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...