கோவை: திமுக எம்எல்ஏ வுக்கு அரசு விழாவில் அழைப்பு வழங்காததை கண்டித்து, இன்று காலை அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற திமுகவினர் 100 பேர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்யப்பட்டனர்.
கோவை: திமுக எம்எல்ஏ வுக்கு அரசு விழாவில் அழைப்பு வழங்காததை கண்டித்து, இன்று காலை அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற திமுகவினர் 100 பேர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2016 தேர்தலில் 9 இடங்களை அதிமுக கைப்பற்றியது. சிங்காநல்லூர் தொகுதியை மட்டும் திமுக வென்றது. சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ,வாக கார்த்திக் இருந்து வருகிறார். அவர் தொடர்ந்து அவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்து, மக்களின் குறைகளை தினம்தோறும் கேட்டு, பல்வேறு விதமான போராட்டங்களை மக்களுக்காக முன்னெடுத்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று காலை சாலைப் பணியை துவக்கி வைப்பதற்காக சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைச்சர் எஸ். பி. வேலுமணி கலந்து கொள்ளக்கூடிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதைக் கேள்விப்பட்ட தி.மு.க.வினர் ஆத்திரம் அடைந்தனர். தொடர்ந்து அரசு விழாக்களில், திமுக எம்எல்ஏவுக்கு அழைப்பு இல்லாமல் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து சிங்காநல்லூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கொடிகளுடன் அங்கு கூடினர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற இந்த தகவல் அறிந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
அப்போது, திமுகவினர் அமைச்சருக்கு எதிராகவும் அதிமுக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனால், போலீசாருக்கும் திமுக வினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஆதலால், இன்று காலை அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
பிறகு, 100 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.