கோவை: சரக்கு வாகனங்களை தடை செய்யும்விதமாக மத்திய அரசு விதித்துள்ள புதிய சட்டத்துக்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தச் சட்டத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை: சரக்கு வாகனங்களை தடை செய்யும்விதமாக மத்திய அரசு விதித்துள்ள புதிய சட்டத்துக்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தச் சட்டத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் 2021-ம் ஆண்டு பட்ஜெட்டில் 15 ஆண்டுகளுக்கும் அதிகமாக உள்ள சரக்கு வாகனங்களை தடைசெய்வதற்கான புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தால் நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சட்டத்தால் நடுத்தர லாரி உரிமையாளர்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. லாரி தொழிலை மையமாகக் கொண்டுள்ள பல்வேறு தரப்பு தொழிலாளர்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் புதிய லாரிகள் வாங்க சுமார் ரூபாய் 30 லட்சம் வரை செலவாகும் நிலை உள்ளதால், சரக்கு வாகனப் போக்குவரத்துக்கான வாடகை மும்மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. எனவே மத்திய அரசின் இந்த புதிய சட்டத்தில் தளர்வு ஏற்படுத்த வேண்டுமென்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில், `மத்திய அரசின் இந்தச் சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்ற பெரும் முதலாளிகளை ஊக்குவிக்கும்வகையில் உள்ளது. தமிழகம் முழுவதும்சுமார் இரண்டு லட்சம் லாரிகள் இயங்கி வருகின்றன. மேலும் லாரி சார்ந்த தொழிலை நம்பிசுமார் ஐந்து லட்சம் பேர் உள்ளனர். இந்தச் சட்டம் இயற்றப்பட்டால் பெரும்பாலான லாரி உரிமையாளர்கள் பெரும் கடன் சுமைக்கு ஆளாக்கப்படுவார்கள்.
பிள்ளைகளின் படிப்பு, மாதத் தவணை என பல்வேறுசிரமங்களுக்கு நடுவே இந்தத் தொழிலை செய்து வருகிறோம். ஏற்கெனவே நாளுக்கு நாள் உயரும் டீசல் விலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோம். சுங்கச்சாவடி கட்டணம், இன்சூரன்ஸ் என பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், புதிய லாரிகள் வாங்கினால் 50,000 முதல் 70,000 ரூபாய் வரை மாதத் தவணை தொகை மூலம் கடன் சுமை அதிகரிக்கும். மேலும் இதனால் லாரி வாடகையை மும்மடங்குஉயர்த்தவேண்டிய சூழல் உருவாகும்.
இதைத்தொடர்ந்து விவசாய உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து சாமானியர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த சட்டத்தின்மூலம் லாரி தொழிலை நம்பியிருக்கும் லாரி உரிமையாளர்கள் தற்கொலை செய்யும் நிலை ஏற்படும், எனவே அரசு இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
மத்திய அரசின் 2021-ம் ஆண்டு பட்ஜெட்டில் 15 ஆண்டுகளுக்கும் அதிகமாக உள்ள சரக்கு வாகனங்களை தடைசெய்வதற்கான புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தால் நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சட்டத்தால் நடுத்தர லாரி உரிமையாளர்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. லாரி தொழிலை மையமாகக் கொண்டுள்ள பல்வேறு தரப்பு தொழிலாளர்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் புதிய லாரிகள் வாங்க சுமார் ரூபாய் 30 லட்சம் வரை செலவாகும் நிலை உள்ளதால், சரக்கு வாகனப் போக்குவரத்துக்கான வாடகை மும்மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. எனவே மத்திய அரசின் இந்த புதிய சட்டத்தில் தளர்வு ஏற்படுத்த வேண்டுமென்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில், `மத்திய அரசின் இந்தச் சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்ற பெரும் முதலாளிகளை ஊக்குவிக்கும்வகையில் உள்ளது. தமிழகம் முழுவதும்சுமார் இரண்டு லட்சம் லாரிகள் இயங்கி வருகின்றன. மேலும் லாரி சார்ந்த தொழிலை நம்பிசுமார் ஐந்து லட்சம் பேர் உள்ளனர். இந்தச் சட்டம் இயற்றப்பட்டால் பெரும்பாலான லாரி உரிமையாளர்கள் பெரும் கடன் சுமைக்கு ஆளாக்கப்படுவார்கள்.
பிள்ளைகளின் படிப்பு, மாதத் தவணை என பல்வேறுசிரமங்களுக்கு நடுவே இந்தத் தொழிலை செய்து வருகிறோம். ஏற்கெனவே நாளுக்கு நாள் உயரும் டீசல் விலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோம். சுங்கச்சாவடி கட்டணம், இன்சூரன்ஸ் என பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், புதிய லாரிகள் வாங்கினால் 50,000 முதல் 70,000 ரூபாய் வரை மாதத் தவணை தொகை மூலம் கடன் சுமை அதிகரிக்கும். மேலும் இதனால் லாரி வாடகையை மும்மடங்குஉயர்த்தவேண்டிய சூழல் உருவாகும்.
இதைத்தொடர்ந்து விவசாய உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து சாமானியர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த சட்டத்தின்மூலம் லாரி தொழிலை நம்பியிருக்கும் லாரி உரிமையாளர்கள் தற்கொலை செய்யும் நிலை ஏற்படும், எனவே அரசு இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.