ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் குண்டம் திருவிழா உறுதியானது: 11-ஆம் தேதி கொடியேற்றம்!

கோவை: ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெறுவது உறுதியானது. இதையடுத்து வரும் 11-ஆம் தேதி கொடியேற்றப்படுகிறது.


கோவை: ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெறுவது உறுதியானது. இதையடுத்து வரும் 11-ஆம் தேதி கொடியேற்றப்படுகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவுக்குகோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் விரதமிருந்து குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக இந்த ஆண்டு மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில், குண்டம் திருவிழா நடத்துவதற்கான ஆலோசனைகளைக் கேட்டு கோவை மாவட்ட ஆட்சியருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடிதம் அனுப்பி இருந்தனர். இதைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் குண்டம் திருவிழா நடத்த அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆனைமலை குண்டம் திருவிழா நடத்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 11-ஆம் தேதி தை அமாவாசை அன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கி 24-ஆம் தேதி நள்ளிரவு மயான பூஜையும், 26-ஆம் தேதி இரவு குண்டம் பூ வளர்த்தல், தேர் திருவீதி உலாவும், முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி 27-ஆம் தேதி காலை நடைபெற இருப்பதாக மாசாணியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...