கோவை: எங்கள்மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது, சம்பவத்தின்போது நாங்கள் வீட்டில் இருந்தோம் என்று கோவை இந்து முன்னணி நிர்வாகிகள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளனர்.
கோவை: எங்கள்மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது, சம்பவத்தின்போது நாங்கள் வீட்டில் இருந்தோம் என்று கோவை இந்து முன்னணி நிர்வாகிகள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இந்து முன்னணியின் கோவை கோட்டச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் அதன் நிர்வாகிகள் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த 26-ம் தேதி பாரதப் பிரதமரை இழிவுபடுத்தும்வகையில் ஒரு சில அமைப்பினர் சித்தரித்தனர். இதனைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு சில அமைப்பினர் உள்ளே புகுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் ரகளை ஏற்பட்டது. இந்தச் சம்பவம் முழுவதும் காவல்துறையினரால் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும்போது இந்து முன்னணியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் சிலரது பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஆரம்பகட்ட விசாரணைகூட நடத்தாமல் இந்து முன்னணியைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் தங்கவேலு உள்பட நிர்வாகிகள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள அனைவரும் காவல்துறை சார்பில் தனிப் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்தபோது நாங்கள் அனைவரும் வீட்டில் இருந்தோம். எங்களுடன் பாதுகாப்பு அதிகாரிகள் உடனிருந்தனர். எனவே பாதுகாப்பு அதிகாரிகளின் தினசரி நடவடிக்கை நாட்குறிப்பைப் பார்த்து அதில் இந்து முன்னணி நபர்கள் ஈடுபடவில்லை என்பதை போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்து முன்னணியின் கோவை கோட்டச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் அதன் நிர்வாகிகள் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த 26-ம் தேதி பாரதப் பிரதமரை இழிவுபடுத்தும்வகையில் ஒரு சில அமைப்பினர் சித்தரித்தனர். இதனைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு சில அமைப்பினர் உள்ளே புகுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் ரகளை ஏற்பட்டது. இந்தச் சம்பவம் முழுவதும் காவல்துறையினரால் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும்போது இந்து முன்னணியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் சிலரது பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஆரம்பகட்ட விசாரணைகூட நடத்தாமல் இந்து முன்னணியைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் தங்கவேலு உள்பட நிர்வாகிகள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள அனைவரும் காவல்துறை சார்பில் தனிப் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்தபோது நாங்கள் அனைவரும் வீட்டில் இருந்தோம். எங்களுடன் பாதுகாப்பு அதிகாரிகள் உடனிருந்தனர். எனவே பாதுகாப்பு அதிகாரிகளின் தினசரி நடவடிக்கை நாட்குறிப்பைப் பார்த்து அதில் இந்து முன்னணி நபர்கள் ஈடுபடவில்லை என்பதை போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.