கோவை: கேரள மாநில நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கோவையில் மேற்கொண்ட சோதனையில், தினேஷ் என்ற பல் மருத்துவரை கைது செய்து விசாரணைக்கு மலப்புரம்அழைத்து சென்றனர்.
கோவை: கேரள மாநில நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கோவையில் மேற்கொண்ட சோதனையில், தினேஷ் என்ற பல் மருத்துவரை கைது செய்து விசாரணைக்கு மலப்புரம்அழைத்து சென்றனர்.
கடந்த வாரங்களுக்கு முன்பு சித்திரவள்ளி ராஜன் என்ற மாவோயிஸ்ட் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கேரளா நீதிமன்ற அனுமதி பெற்று நேற்று கோவைக்கு வந்த நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், கோவை தடாகம் ரோடு, இடையர்பாளையம், உக்கடம், சுங்கம் ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள பார்த்திபன் என்பவரது வீட்டிலும், சுங்கம் பகுதியில் உள்ள ராஜேஷ் என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. பின்னர், இடையர்பாளையம் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் பல் டாக்டராக வேலை பார்த்துவந்த தினேஷ் என்பவரை கைது செய்தனர்.
அவரது, அறையில் சோதனை செய்தபோது அங்கு இருந்து இரண்டு லேப்டாப், 5 செல்போன்கள், 2 பேட்டரி, ஒரு சிடி, அடையாள அட்டை, புத்தகங்கள், தேர்தலை புறக்கணிப்பு என்ற போட்டோ காப்பி உள்ளிட்டவற்றை பறிமுதல் நக்சல் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்த தினேஷை, விசாரணைக்காக கேரளா, மலப்புத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம், மாவோயிஸ்டுகள் உடனான தொடர்பு குறித்தும் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்தும் விடிய விடிய கேரளா நக்சல் தடுப்பு போலீஸார் விசாரணை நடத்தியதாகவும், விசாரணை முடிந்ததும், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரங்களுக்கு முன்பு சித்திரவள்ளி ராஜன் என்ற மாவோயிஸ்ட் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கேரளா நீதிமன்ற அனுமதி பெற்று நேற்று கோவைக்கு வந்த நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், கோவை தடாகம் ரோடு, இடையர்பாளையம், உக்கடம், சுங்கம் ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள பார்த்திபன் என்பவரது வீட்டிலும், சுங்கம் பகுதியில் உள்ள ராஜேஷ் என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. பின்னர், இடையர்பாளையம் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் பல் டாக்டராக வேலை பார்த்துவந்த தினேஷ் என்பவரை கைது செய்தனர்.
அவரது, அறையில் சோதனை செய்தபோது அங்கு இருந்து இரண்டு லேப்டாப், 5 செல்போன்கள், 2 பேட்டரி, ஒரு சிடி, அடையாள அட்டை, புத்தகங்கள், தேர்தலை புறக்கணிப்பு என்ற போட்டோ காப்பி உள்ளிட்டவற்றை பறிமுதல் நக்சல் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்த தினேஷை, விசாரணைக்காக கேரளா, மலப்புத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம், மாவோயிஸ்டுகள் உடனான தொடர்பு குறித்தும் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்தும் விடிய விடிய கேரளா நக்சல் தடுப்பு போலீஸார் விசாரணை நடத்தியதாகவும், விசாரணை முடிந்ததும், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.