கோவை- மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் சேவையை மீண்டும் துவக்க மக்கள் கோரிக்கை

கோவை: கொரோனா ஊரடங்கு முன்பு தினசரி இயங்கி வந்த கோவை - மேட்டுப்பாளையம் ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கொரோனா ஊரடங்கு முன்பு தினசரி இயங்கி வந்த கோவை - மேட்டுப்பாளையம் ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் முதல் கோவை வரை தினசரி ஐந்து முறை இயங்கி வந்த பயணிகள் மெமோ ரயில் சேவை, கடந்த வருடம் மார்ச் மாதம் இறுதியில் நிறுத்தப்பட்டது.

தற்போது, பல்வேறு சிறப்பு ரயில்கள் உள்பட பல்வேறு மார்க்கங்களில் தென்னக ரயில்வே ரயில்களை இயக்கி வரும் நிலையில், பெரும்பாலான மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த கோவை-மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் சேவையை மீண்டும் துவக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட உள்ளிட்ட பல தளர்வுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ள நிலையில், பொது மக்களின் பொதுப் போக்குவரத்தான பயணிகள் ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளது, மக்களிடையே பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தி உள்ளது, என்று தெரிவித்தனர்.

தற்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் சாலை மார்க்கத்தில் மேம்பால பணிகள் நடைபெறுவதன் காரணமாக, பேருந்து முதல் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் செல்ல மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, மாற்றுப்பாதையில் சென்றுவர பயண தூரம் அதிகரிப்பதுடன், பேருந்துகளில் இருமடங்கு நேரம்வரை ஆகிவிடுகிறது, என்று பல்வேறு சிரமங்களையும், இன்னல்களையும் சந்தித்து வரும் மக்கள் தெரிவித்தனர்.

எனவே, மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ஏற்கனவே செயல்பாட்டில் இயங்கிவந்த பயணிகள் மெமோ ரயிலை இரு மார்க்கத்திலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக இயக்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும், என மேட்டுப்பாளையம் பகுதிவாழ் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...