கோவை துப்புரவு பணியாளர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்!

கோவை: கோவை மருத்துவமனையில் வேலை பார்த்த துப்பரவு பணியாளர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மருத்துவமனையில் வேலை பார்த்த துப்பரவு பணியாளர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நகர்நல மையத்தில் பணியாற்றி வந்த துப்புரவு பணியாளர் ரங்கசாமி நேற்று முன்தினம் பூச்சி மருந்து குடித்தார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், ரங்கசாமி தற்கொலைக்கு செவிலியர் லதா அலுவலர்கள் சாலமன் மற்றும் ரேவதி ஆகிய மூன்று பேரும் தான் காரணம் என்று வீடியோ பதிவு செய்தது வெளியானது. ரங்கசாமி தற்கொலைக்கு காரணமான அவர்கள் 3 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி நேற்று கோவை அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து இன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த ரங்கசாமி குடும்பத்தார் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ரங்கசாமி தற்கொலைக்கு காரணமான 3 பேரையும் கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.



அதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து ஆட்சியரை சந்திக்கச் சென்றனர். ஆர்ப்பாட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...