பொள்ளாச்சி அருகே தென்னை நார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

கோவை: பொள்ளாச்சி அருகே தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.


கோவை: பொள்ளாச்சி அருகே தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னாலம்மன்துறையில் அனிதா என்பவருக்குச் சொந்தமான தனியார் தென்னை நார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்நிலையில், வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென ஒரு பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதையடுத்து, தொழிலாளர்கள் பொள்ளாச்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால், தீயணைப்புத்துறையினர் பொள்ளாச்சியில் இருந்து வருவதற்குள் பெரும்பாலான தென்னை நார்கள் எரிந்து நாசமாயின.



பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.



இந்த தீ விபத்தால் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தென்னை நார் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து ஆனைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பொள்ளாச்சி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட தனியார் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளது. ஆனால், பொள்ளாச்சியில் தீயணைப்பு நிலையம் ஒன்று மட்டுமே உள்ளதால் இப்பகுதியில் தென்னை நார் உரிமையாளர்கள் ஆனைமலையில் தீயணைப்பு நிலையம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...