கோவை: பொள்ளாச்சி அருகே கோவில் பாளையத்தில் தண்ணீர் பிடிக்க சென்ற போது, விஷப்பாம்பு கடித்து வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: பொள்ளாச்சி அருகே கோவில் பாளையத்தில் தண்ணீர் பிடிக்க சென்ற போது, விஷப்பாம்பு கடித்து வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மேலும், இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தொழிற்சாலையின் பின்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 28ம் தேதி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் சஞ்சய் குமார் என்பவர் இரவு நேரத்தில் அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார். அங்கு திடீரென வந்த விஷப் பாம்பு ஒன்று சஞ்சய்குமார் கடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் சஞ்சய்குமார் அங்கிருந்த திப்பு என்ற நண்பரிடம் தகவல் கொடுத்ததையடுத்து, அங்கிருந்தவர்கள் சஞ்சய்குமாரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சஞ்சய் குமார் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அந்த தொழிற்சாலையில் பணியாற்றி வரும் சந்தான லால் என்பவர் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் இன்று கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மேலும், இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தொழிற்சாலையின் பின்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 28ம் தேதி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் சஞ்சய் குமார் என்பவர் இரவு நேரத்தில் அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார். அங்கு திடீரென வந்த விஷப் பாம்பு ஒன்று சஞ்சய்குமார் கடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் சஞ்சய்குமார் அங்கிருந்த திப்பு என்ற நண்பரிடம் தகவல் கொடுத்ததையடுத்து, அங்கிருந்தவர்கள் சஞ்சய்குமாரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சஞ்சய் குமார் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அந்த தொழிற்சாலையில் பணியாற்றி வரும் சந்தான லால் என்பவர் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் இன்று கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.