தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலைக்கு ஓய் பிளஸ் பாதுகாப்பு...!
கோவை: தமிழக பாஜக துணைத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலைக்கு, ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25 -ம் தேதி பாஜகவில் இணைந்தார். உளவுத் துறை பரிந்துரையின் பெயரில்,
அண்ணாமலைக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் செல்லும் இடத்தில் 5 போலீசார் காவல் பணியில் ஈடுபடுவர். அவர் எங்கு சென்றாலும் அவருடன் இரண்டு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பிற்கு செல்வர். அதில், ஒருவர் காவல் சீருடையிலும், மற்றொருவர் சாதாரண உடையிலும் பணியில் இருப்பர் என்பது குறிப்பிடத்கக்கது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதால், முக்கிய நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25 -ம் தேதி பாஜகவில் இணைந்தார். உளவுத் துறை பரிந்துரையின் பெயரில்,
அண்ணாமலைக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் செல்லும் இடத்தில் 5 போலீசார் காவல் பணியில் ஈடுபடுவர். அவர் எங்கு சென்றாலும் அவருடன் இரண்டு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பிற்கு செல்வர். அதில், ஒருவர் காவல் சீருடையிலும், மற்றொருவர் சாதாரண உடையிலும் பணியில் இருப்பர் என்பது குறிப்பிடத்கக்கது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதால், முக்கிய நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.