கோவையில் அரியர் தேர்வு எழுத வந்த கல்லூரி மாணவர்கள் இருவர் இரயிலில் அடிபட்டு பலி..!

கோவையில் அரியர் தேர்வு எழுத வந்த கல்லூரி மாணவர்கள் இருவர் இரயிலில் அடிபட்டு பலி..!


கோவை: கோவையில் கல்லூரி படிப்பை முடித்த பிறகு அரியர் பரிட்சை எழுதுவதற்காக கோவை வந்திருந்த 2 மாணவர்கள் இன்று அதிகாலை ரயிலில் அடிபட்டு உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறியதாவது:- திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவா (வயது 22), இவருடைய நண்பர் திருவாரூரைச் சேர்ந்தவர் பவித்திரன் (வயது 22). இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.சி.எஸ் கல்லூரியில் ஆர்க்கிடெக்ட் படிப்பு படித்து வந்தனர்.

இவர்களுக்கு இருவரும் அரியர் தேர்வு எழுதுவதற்க்காக, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் ஒரு அறையில் தங்கி வந்தனர்.இந்த நிலையில், இன்று அதிகாலை தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள தண்டவாள பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த ப்ளூ மவுண்டன் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இவர்கள் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். அந்த பகுதியில் அதிகாலை வாக்கிங் சென்றவர்கள் மாணவர்களின் உடல்களை பார்த்துவிட்டு கோவை சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு உடல்களையும் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரு மாணவர்கள் ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் மாணவர்கள் மட்டும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...