கோவை: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 3வது நாளாக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 3வது நாளாக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து இன்று நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் தமிழகத்தில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அங்கன்வாடி, சத்துணவு, வருவாய், கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் 3.5 லட்சம் பேருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் ஆதிசேஷையா குழுவின் பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.