கோவையில் பா.ஜ.க. - இஸ்லாமியர் பிரச்சினைக்குத் தீர்வுகாண மத நல்லிணக்கக் கூட்டம்: பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை!

கோவை: பா.ஜ.க. - இஸ்லாமியர் இடையே போராட்டங்கள் நடைபெற்று வருவதால் மதநல்லிணக்க கூட்டத்தை நடத்தி கோவை மாவட்டத்தில் அமைதி ஏற்படுத்த வேண்டுமென்று மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: பா.ஜ.க. - இஸ்லாமியர் இடையே போராட்டங்கள் நடைபெற்று வருவதால் மதநல்லிணக்க கூட்டத்தை நடத்தி கோவை மாவட்டத்தில் அமைதி ஏற்படுத்த வேண்டுமென்று மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவையில் இருதரப்பு பிரச்சினைக்குத் தீர்வுகாண மத நல்லிணக்கக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் நடந்த எஸ்.டி.பி.ஐ. ஊர்வலத்தில் பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து பேசியதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க. கூட்டம் நடத்தியது. அப்போது நபிகள் நாயகம் குறித்து அக் கட்சியைச் சேர்ந்த கல்யாணராமன் அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார்.

மோடி குறித்து அவதூறாக பேசிய இஸ்லாமிய அமைப்பினரைக் கண்டித்து பா.ஜ.க.வினரும், நபிகள் நாயகம் குறித்து பேசியதைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்பினரும் கடந்த 3 நாட்களாக ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் பா.ஜ.க. சார்பில் 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்த இஸ்லாமிய அமைப்புகள்மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரு தரப்பினரும் மாறி மாறி போராட்டம் நடத்தி வருவதால் பதட்டமான சூழல் உருவாகிறது. போலீஸ் பாதுகாப்பு அளிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

இந்த பிரச்சனைக்குத் தீர்வுகாண இருதரப்பினரையும் அழைத்து மத நல்லிணக்கக் கூட்டம் நடத்தி சமரசம் ஏற்படுத்த வேண்டும் என்று நகரின் அமைதியான வளர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...