கோவை: கோவையில் சமூக நல்லிணக்கத்தை சீர்கெடுத்து மதக்கலவரத்தை தூண்டும் வகையில் நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேசிய பாஜக கல்யாண ராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை கோரி காவல் ஆணையாளரிடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கோவை: கோவையில் சமூக நல்லிணக்கத்தை சீர்கெடுத்து மதக்கலவரத்தை தூண்டும் வகையில் நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேசிய பாஜக கல்யாண ராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை கோரி காவல் ஆணையாளரிடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :-
கடந்த 31.01.2021 அன்று மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் உலக இஸ்லாமியர்கள் புனிதமாகக் கருதக்கூடிய நபிகள் நாயகத்தை மிக தரக்குறைவாக விமர்சித்து இஸ்லாமியர்கள் மனது புண்படும்படி பேசியுள்ளார்.
இதுபோன்ற வன்ம பேச்சுக்களை இவர் தொடர்ந்து பேசுவதால் தமிழகத்தில் கலவரம் ஏற்படும் சூழல் உருவாகிறது. ஆகவே, இதுபோல் யாரும் பேசாமல் இருக்க வேண்டும் என்றால் இவ்வாறு பேசிய கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :-
கடந்த 31.01.2021 அன்று மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் உலக இஸ்லாமியர்கள் புனிதமாகக் கருதக்கூடிய நபிகள் நாயகத்தை மிக தரக்குறைவாக விமர்சித்து இஸ்லாமியர்கள் மனது புண்படும்படி பேசியுள்ளார்.
இதுபோன்ற வன்ம பேச்சுக்களை இவர் தொடர்ந்து பேசுவதால் தமிழகத்தில் கலவரம் ஏற்படும் சூழல் உருவாகிறது. ஆகவே, இதுபோல் யாரும் பேசாமல் இருக்க வேண்டும் என்றால் இவ்வாறு பேசிய கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.