கோவையில் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ட்ரோன் கேமரா: PSG மற்றும்‌ GRG கல்வி நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டது!

கோவை: கோவையில் பண்டிகை காலங்கள் மற்றும் ஆர்ப்பாட்ட சமயங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிக்க அதிகத்திறன்‌ வாய்ந்த Drone Camera ஒன்றினை PSG மற்றும்‌ GRG கல்வி நிறுவனங்களின் சார்பில் கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ சுமித்சரண்‌, இ.கா.ப அவர்களிடம்‌ இன்று வழங்கினர்‌.


கோவை: கோவையில் பண்டிகை காலங்கள் மற்றும் ஆர்ப்பாட்ட சமயங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிக்க, அதிகத்திறன்‌ வாய்ந்த Drone Camera ஒன்றினை PSG மற்றும்‌ GRG கல்வி நிறுவனங்களின் சார்பில் கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ சுமித்சரண்‌, இ.கா.ப அவர்களிடம்‌ இன்று வழங்கினர்‌.

கோவை மாநகர காவல்‌ சரகத்தில்‌ நடைபெறும்‌ தேர்‌ திருவிழாக்கள்‌, தீபாவளி மற்றும்‌ பொங்கல்‌ பண்டிகைகளை முன்னிட்டு அதிகப்படியாக மக்கள்‌ கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள்‌, கடைவீதி பகுதிகள்‌ மற்றும்‌ ஆர்ப்பாட்டம்‌, போராட்டம்‌ போன்ற சமயங்களில் பொதுமக்களின்‌ பாதுகாப்பை கருத்தில்‌ கொண்டும்‌, மேலும்‌ குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும்‌ உதவும்‌ வகையில்‌ "Drone Camera" பயன்படுத்தி பாதுகாப்பை உறுதிபடுத்தும்‌ நோக்கில்‌, PSG கல்வி நிறுவனங்களில்‌ நிர்வாக அறங்காவலர்‌ கோபாலகிருஷ்ணன்‌ மற்றும்‌ GRG கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்‌ நந்தினி ரங்கசாமி ஆகியோர்‌ அதிகத்திறன்‌ வாய்ந்த Drone Camera ஒன்றினை கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ சுமித்சரண்‌, இ.கா.ப அவர்களிடம்‌ இன்று (03.02.2021) வழங்கினர்‌.

இந்த அதித்திறன்‌ வாய்ந்த Drone Camera இரவு நேரங்களிலும்‌ கண்காணிக்கக்‌ கூடிய வகையில்‌ (Night Vision) கேமரா பொருத்தப்பட்டும்‌ மற்றும்‌ நான்கு கிலோமீட்டர்‌ தொலைவு வரை சென்று படம்‌ பிடிக்கக்‌ கூடிய தொழில்நுட்பம்‌ கொண்டதாகும்‌. இதன்‌ மூலம்‌ முக்கியமான போராட்டம்‌, ஆர்ப்பாட்டம்‌ மற்றும்‌ தேர்‌ திருவிழா காலங்களிலும்‌ மற்றும்‌ பண்டிகை காலங்களிலும்‌ பொதுமக்களின்‌ பாதுகாப்பை உறுதிபடுத்தவும்‌, கண்காணிக்கவும்‌, குற்றச்செயல்களை தடுக்கவும்‌ ஏதுவாக இருக்கும்‌ என காவல்‌ ஆணையர்‌ சுமித்‌ சரண்‌, இ.கா.ப அவர்கள்‌ தெரிவித்தார்‌.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...