கோவை சமத்துவ மக்கள் கட்சி முக்கிய பிரமுகர்கள் நீக்கம்: சரத்குமார் அதிரடி!

கோவை: சமத்துவ மக்கள் கட்சியின் மாநில முதன்மை துணைப் பொதுச் செயலாளர் கோவை சண்முகசுந்தரமும், கோவை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த சி.டி மணிகண்டனும் அவர்கள் வகித்து வந்த பதவிகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார் அறிவித்துள்ளார்.



அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஆர்.சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மை துணை பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தவர் கோவை சண்முகசுந்தரம். அவர் தனது சொந்தப் பணி மற்றும் தொழில் காரணமாக கட்சிப் பணிகளில் ஈடுபட இயலாமல் இருப்பதால் அவர் வகித்துவந்த முதன்மை துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து இன்று முதல் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் வகித்து வந்த பதவியை சமத்துவ மக்கள் கட்சி மாநில மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் இன்று முதல் கூடுதலாக கவனிப்பார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு தெற்கு மண்டல நிர்வாகிகள் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியினர் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில முதன்மை துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வகிக்கும் ராதிகா சரத்குமாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து கட்சிப் பணிகளில் திறம்பட சிறப்பாக விவேகத்துடனும் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இதேபோல் கோவை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த சி.டி மணிகண்டன் கட்சியின் கோட்பாடுகளுக்கு முரணாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் இன்று முதல் அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இயக்கத்தின் நிர்வாகிகள் யாரும் அவருடன் தொடர்பில் இருக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். கோவை புறநகர் மேற்கு மாவட்டத்துக்கு விரைவில் மாவட்டச் செயலாளர் நியமிக்கப்படுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...