கோவை: தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,080 குறைக்கப்பட்டுள்ளது.
கோவை: தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,080 குறைக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை நகரமான கோயம்புத்தூர் தங்க நகை உற்பத்திக்கும் பெயர் பெற்றது. கோவையைப் பொறுத்தவரை தங்க நகை உற்பத்தி தொழிலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தங்கத்தின் விலை அசாதாரண விலை உயர்வைக் கண்டது. அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,000 (8 கிராம் தங்கம்) ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.
கடந்த சில மாதங்களாக தங்கத்தின்விலை தொடர்ந்து ரூ.39,000, ரூ.38,000 என இருந்தது. உலகெங்கும் தங்கத்தின்மீது அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டதுடன் அதிகமாக இறக்குமதி வரி விதிக்கப்பட்டது, ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் போன்றவையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்பட்டது. தற்போது மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைத்துள்ளதையடுத்து தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
இதுகுறித்து கோயம்புத்தூர் தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பி.முத்து வெங்கட்ராம் கூறியதாவது:-
முன்பு தங்கத்துக்கு 12.5 சதவீதஇறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இப்போது கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது, இது இறக்குமதி வரியை 10.75 சதவீதமாக குறைத்துள்ளது. இதுதவிரஉலகச் சந்தையிலும் தங்கத்தின் விலை 25 டாலர்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணங்களால் தங்கத்தின் விலை சரியத் தொடங்கியது.
வரி விகிதங்களைக் குறைத்து அறிவித்த மத்திய அரசின் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்த வரி குறைப்பு போதாது. தங்க நகை உற்பத்தி தொழிலில் இந்தியா முழுவதும் 5 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர், கோயம்புத்தூரில் மட்டும் 1 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
தங்க நகைத் தொழிலாளர்களின் நலனை கருத்தில்கொண்டு, மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை 6 சதவீதமாகவும், தங்கத்துக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை 3 சதவீதம் முதல் 1.5 சதவீதமாகவும் குறைக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சில நாட்களாக கோயம்புத்தூர் சந்தையில் ஒரு சவரன் தங்கத்தின் (8 கிராம்) விலை நிலவரம் வருமாறு:-
ஜனவரி 28 -ந்தேதி ரூ.37,680
ஜனவரி 29-ந்தேதி ரூ.37,640
பிப்ரவரி 1-ந்தேதி ரூ.38,008
பிப்ரவரி 2-ந்தேதி ரூ.37,960
பிப்ரவரி 3 (இன்று) - ரூ.36,880
தொழில்துறை நகரமான கோயம்புத்தூர் தங்க நகை உற்பத்திக்கும் பெயர் பெற்றது. கோவையைப் பொறுத்தவரை தங்க நகை உற்பத்தி தொழிலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தங்கத்தின் விலை அசாதாரண விலை உயர்வைக் கண்டது. அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,000 (8 கிராம் தங்கம்) ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.
கடந்த சில மாதங்களாக தங்கத்தின்விலை தொடர்ந்து ரூ.39,000, ரூ.38,000 என இருந்தது. உலகெங்கும் தங்கத்தின்மீது அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டதுடன் அதிகமாக இறக்குமதி வரி விதிக்கப்பட்டது, ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் போன்றவையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்பட்டது. தற்போது மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைத்துள்ளதையடுத்து தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
இதுகுறித்து கோயம்புத்தூர் தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பி.முத்து வெங்கட்ராம் கூறியதாவது:-
முன்பு தங்கத்துக்கு 12.5 சதவீதஇறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இப்போது கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது, இது இறக்குமதி வரியை 10.75 சதவீதமாக குறைத்துள்ளது. இதுதவிரஉலகச் சந்தையிலும் தங்கத்தின் விலை 25 டாலர்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணங்களால் தங்கத்தின் விலை சரியத் தொடங்கியது.
வரி விகிதங்களைக் குறைத்து அறிவித்த மத்திய அரசின் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்த வரி குறைப்பு போதாது. தங்க நகை உற்பத்தி தொழிலில் இந்தியா முழுவதும் 5 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர், கோயம்புத்தூரில் மட்டும் 1 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
தங்க நகைத் தொழிலாளர்களின் நலனை கருத்தில்கொண்டு, மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை 6 சதவீதமாகவும், தங்கத்துக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை 3 சதவீதம் முதல் 1.5 சதவீதமாகவும் குறைக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சில நாட்களாக கோயம்புத்தூர் சந்தையில் ஒரு சவரன் தங்கத்தின் (8 கிராம்) விலை நிலவரம் வருமாறு:-
ஜனவரி 28 -ந்தேதி ரூ.37,680
ஜனவரி 29-ந்தேதி ரூ.37,640
பிப்ரவரி 1-ந்தேதி ரூ.38,008
பிப்ரவரி 2-ந்தேதி ரூ.37,960
பிப்ரவரி 3 (இன்று) - ரூ.36,880