கோவை: கோவையில் சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரபட்டி ஊராட்சியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: கோவையில் சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரபட்டி ஊராட்சியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் வட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் பெரும்பாலானோர் கால்நடை, கோழிப்பண்ணை, தென்னை விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 20 வருடங்களாக பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட டயனமைட் டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காற்றாலைகள் இயங்கி வந்தன.
இதனிடையே, அந்த நிறுவனம் மூடப்பட உள்ள நிலையில், வாரபட்டி ஊராட்சி பகுதியில் 421 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சிப்காட் தொழிற்சாலை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் சந்தித்து மனு அளித்தனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி நடராஜன் கூறுகையில், சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் பட்சத்தில் அங்கு சாயத் தொழில், தோல் தொழிற்சாலை, இரும்பு உருக்காலை அமையும் பட்சத்தில் நிலத்தடி நீர் மாசடைந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்வதால் சிப்காட் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.
இதனிடையே, இன்று காலை வாரபட்டி கிராமத்துக்கு சென்ற தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், திரைப்பட இயக்குனருமான வ.கவுதமனை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வாரபட்டி செல்ல அவர் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம் சூலூர் வட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் பெரும்பாலானோர் கால்நடை, கோழிப்பண்ணை, தென்னை விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 20 வருடங்களாக பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட டயனமைட் டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காற்றாலைகள் இயங்கி வந்தன.
இதனிடையே, அந்த நிறுவனம் மூடப்பட உள்ள நிலையில், வாரபட்டி ஊராட்சி பகுதியில் 421 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சிப்காட் தொழிற்சாலை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் சந்தித்து மனு அளித்தனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி நடராஜன் கூறுகையில், சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் பட்சத்தில் அங்கு சாயத் தொழில், தோல் தொழிற்சாலை, இரும்பு உருக்காலை அமையும் பட்சத்தில் நிலத்தடி நீர் மாசடைந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்வதால் சிப்காட் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.
இதனிடையே, இன்று காலை வாரபட்டி கிராமத்துக்கு சென்ற தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், திரைப்பட இயக்குனருமான வ.கவுதமனை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வாரபட்டி செல்ல அவர் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.