கோவை: கோவை சட்ட நகல் எரிப்பு போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மற்றும் காவல் துறைக் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கோவை: கோவை சட்ட நகல் எரிப்பு போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மற்றும் காவல் துறைக் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்டதிருத்த தொகுப்பு நகல் எரிப்பு போரட்டம் காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையல் அருகில் இன்று நடைபெற்றது. மின்சார சட்டம் 2020 ஐ திரும்ப்பெற வலியுறுத்தியும், தனியார் மயமாக்கலை கண்டித்தும், நாடு முழுவதும் சட்ட நகல் எரிக்கும் போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தது.
இதன் ஒரு பகுதியாக, கோவை காந்திபுரத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நகல் எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் சட்டநகலை எரிக்க முயன்றபோது காவல்துறையினர் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட முப்பதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டனர்.