கோவையில் இரு கண்டெய்னர் லாரிகள் மோதி விபத்து; டிரைவர் பலி

கோவை: கோவை அருகே கருமத்தம்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதியதில், டிரைவர் சம்பவ இடத்திலலேயே பலியானார். மற்றொரு டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கோவை: கோவை அருகே கருமத்தம்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதியதில், டிரைவர் சம்பவ இடத்திலலேயே பலியானார். மற்றொரு டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- இன்று மதியம் கருமத்தம்பட்டி அவினாசி நெடுஞ்சாலையில் பழுதாகி ஒரு கண்டெய்னர் லாரி நின்றுகொண்டிருந்தது. அந்த லாரியின் டிரைவர் கிறிஸ்டோபர் ஜெபராஜ், லாரியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி நிலை தடுமாறி நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது.

இந்த விபத்தில், தூக்கி வீசப்பட்ட கிறிஸ்டோபர் ஜெபராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்த ஓட்டுநரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிருக்குப் போராடிய மற்றொரு டிரைவரை ஆம்புலன்ஸ் மூலமாக கோவை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து 304 Aபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தின் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...