7 பேர் விடுதலை விவகாரத்தில் பா.ஜ.க. ஒத்துழைப்பு நேரடியாக இல்லை, கவர்னரே முடிவெடுப்பார்: வானதி சீனிவாசன் சொல்கிறார்!

பொள்ளாச்சி: 7 பேர் விடுதலை விவகாரத்தில் பா.ஜ.க.வின் ஒத்துழைப்பு நேரடியாக இல்லை. அரசியலமைப்பு சட்டப்படி கவர்னரே முடிவெடுப்பார் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.


பொள்ளாச்சி: 7 பேர் விடுதலை விவகாரத்தில் பா.ஜ.க.வின் ஒத்துழைப்பு நேரடியாக இல்லை. அரசியலமைப்பு சட்டப்படி கவர்னரே முடிவெடுப்பார் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.



பொள்ளாச்சியில் பா.ஜ.க. அலுவலக கட்டிட திறப்பு விழா மற்றும் தென்னைநார் உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இதில் பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு, தென்னை நார் உற்பத்தியாளர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில்இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் உள்ள சட்ட சிக்கல்கள் பல்வேறு கட்டங்களை கடந்து வந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஒருபுறமும், மறுபுறம் மாநில அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அரசியலமைப்பு சட்டப்படி கவர்னர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை எடுப்பார். இதில் பாஜகவின் ஒத்துழைப்பு என்பது நேரடியாக இல்லை,10 பத்து ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணியில், அங்கம் வகித்த போது தமிழகத்திற்கு கிடைத்த நிதியைவிட பல மடங்கு அதிகமாக தற்போது மத்திய பட்ஜெட்டில் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு மட்டும் 5 லட்சத்து 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் எய்ம்ஸ்மருத்துவமனை வரவில்லை, தற்போது தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகளைமோடி அரசு கொண்டு வந்துள்ளது. அதிக எண்ணிக்கையில்ஸ்மார்ட் சிட்டி போன்ற பல்வேறு திட்டங்களை தமிழகத்துக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 10 ஆண்டுகள் காங்கிரசுடன் அங்கம் வகித்தபோது தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஸ்டாலின்படித்துவிட்டு பட்ஜெட்மீதுவிமர்சனம் செய்ய வேண்டும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த வேண்டிய பணி என்பதால், கால தாமதமாகி வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கும்.

இவ்வாறு கூறிய அவர், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்வகையில் மத்திய பட்ஜெட் உள்ளதாகவும், பட்ஜெட் அனைத்து துறைகளுக்கும் ஊக்கமளிக்கும்வகையில் உள்ளதாகவும், சுய சார்பு பாரதம் என்ற நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...