கோவை: மரத்தில் இருந்த தேன் கூட்டை கலைத்துவிட்டு தேன் எடுக்க முயன்றவர் கீழே விழுந்து இறந்தார்.
கோவை: மரத்தில் இருந்த தேன் கூட்டை கலைத்துவிட்டு தேன் எடுக்க முயன்றவர் கீழே விழுந்து இறந்தார்.
கோவை தொண்டாமுத்தூர் புதுப்பாளையத்தை அடுத்த மல்லிகை நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 57). இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். முருகேசன் நேற்று புதுப்பாளையத்தில் மரத்தில் உள்ள தேன் கூட்டை அழித்து அதிலிருந்த தேனை எடுக்க தனது நண்பருடன் சென்றுள்ளார்.
மரத்தின் மீது ஏறிய அவர் தேன்கூட்டை அழித்துக் கொண்டிருக்கும்போது கை தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவரை பரிசோதித்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை தொண்டாமுத்தூர் புதுப்பாளையத்தை அடுத்த மல்லிகை நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 57). இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். முருகேசன் நேற்று புதுப்பாளையத்தில் மரத்தில் உள்ள தேன் கூட்டை அழித்து அதிலிருந்த தேனை எடுக்க தனது நண்பருடன் சென்றுள்ளார்.
மரத்தின் மீது ஏறிய அவர் தேன்கூட்டை அழித்துக் கொண்டிருக்கும்போது கை தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவரை பரிசோதித்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.