கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதற்காக 5 நாள் சிறப்பு யோகா வகுப்புகள் நடைபெற்றன.
கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள்உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதற்காக 5 நாள் சிறப்பு யோகா வகுப்புகள் நடைபெற்றன.
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அரசு அதிகாரிகளுக்கான சிறப்பு யோகா வகுப்பு ஜனவரி 25-ந்தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் உள்பட 88 அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
DOPT (Department of Personnel and Training) என அழைக்கப்படும் இந்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மற்றும் அதில் பணியாற்றும் அதிகாரிகளின் மேம்பாட்டுக்காக இந்தியா மற்றும் சர்வதேச பயிற்சி மையங்களால் நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளை வழங்குகிறது. அதில் ஈஷாவின் “இன்னர் இன்ஜினீயரிங் லீடர்ஷிப்' பயிற்சியும் ஒன்றாகும். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அரசு அதிகாரிகள் ஈஷாவின் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர்.

அதன்படி, இந்தாண்டு நடந்த 5 நாள் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு 'ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா' என்ற சக்திவாய்ந்த யோகா கற்றுக்கொடுக்கப்பட்டது. அத்துடன், உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதற்கான எளிமையான யோகப் பயிற்சிகளும் கற்றுக்கொடுக்கப்பட்டன. அத்துடன், சத்குருவுடனான தியான அமர்வுகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்விலும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
அரசு அதிகாரிகள் மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளை சரியாகக் கையாள்வது, உள்நிலையில் அமைதியையும் முழுமையையும் உணர்வது, மற்றவர்களுடனான நட்புறவை மேம்படுத்துவது, மனதில் தெளிவு, உணர்ச்சியில் சமநிலையை உருவாக்கி முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவது போன்றவை இந்த பயிற்சி வகுப்பின் பிரதான நோக்கங்களாகும்.
மேலும், அவர்கள் இந்த வகுப்புகளில் கற்றுக்கொடுக்கப்பட்ட பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருவதன்மூலம் நீண்ட நாட்களாக அவர்கள் சந்தித்துவரும் உடல் மற்றும் மனரீதியான பிரச்சினைகளில் இருந்தும் விடுபட முடியும்.
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அரசு அதிகாரிகளுக்கான சிறப்பு யோகா வகுப்பு ஜனவரி 25-ந்தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் உள்பட 88 அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
DOPT (Department of Personnel and Training) என அழைக்கப்படும் இந்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மற்றும் அதில் பணியாற்றும் அதிகாரிகளின் மேம்பாட்டுக்காக இந்தியா மற்றும் சர்வதேச பயிற்சி மையங்களால் நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளை வழங்குகிறது. அதில் ஈஷாவின் “இன்னர் இன்ஜினீயரிங் லீடர்ஷிப்' பயிற்சியும் ஒன்றாகும். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அரசு அதிகாரிகள் ஈஷாவின் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர்.
அதன்படி, இந்தாண்டு நடந்த 5 நாள் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு 'ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா' என்ற சக்திவாய்ந்த யோகா கற்றுக்கொடுக்கப்பட்டது. அத்துடன், உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதற்கான எளிமையான யோகப் பயிற்சிகளும் கற்றுக்கொடுக்கப்பட்டன. அத்துடன், சத்குருவுடனான தியான அமர்வுகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்விலும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
அரசு அதிகாரிகள் மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளை சரியாகக் கையாள்வது, உள்நிலையில் அமைதியையும் முழுமையையும் உணர்வது, மற்றவர்களுடனான நட்புறவை மேம்படுத்துவது, மனதில் தெளிவு, உணர்ச்சியில் சமநிலையை உருவாக்கி முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவது போன்றவை இந்த பயிற்சி வகுப்பின் பிரதான நோக்கங்களாகும்.
மேலும், அவர்கள் இந்த வகுப்புகளில் கற்றுக்கொடுக்கப்பட்ட பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருவதன்மூலம் நீண்ட நாட்களாக அவர்கள் சந்தித்துவரும் உடல் மற்றும் மனரீதியான பிரச்சினைகளில் இருந்தும் விடுபட முடியும்.