கோவை ஈஷா மையத்தில் ஐ.ஏ.எஸ்‌., ஐ.பி.எஸ்‌ அதிகாரிகள் உடல்‌, மன நலனை மேம்படுத்த 5 நாள்‌ சிறப்பு யோகா வகுப்பு!

கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் ஐ.ஏ.எஸ்‌., ஐ.பி.எஸ்‌ அதிகாரிகள் உடல்‌ மற்றும் மன நலனை மேம்படுத்துவதற்காக 5 நாள்‌ சிறப்பு யோகா வகுப்புகள் நடைபெற்றன.


கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் ஐ.ஏ.எஸ்‌., ஐ.பி.எஸ்‌ அதிகாரிகள்உடல்‌ மற்றும் மன நலனை மேம்படுத்துவதற்காக 5 நாள்‌ சிறப்பு யோகா வகுப்புகள் நடைபெற்றன.

கோவையில்‌ உள்ள ஈஷா யோகா மையத்தில்‌ அரசு அதிகாரிகளுக்கான சிறப்பு யோகா வகுப்பு ஜனவரி 25-ந்தேதி முதல் 29-ம்‌ தேதி வரை நடைபெற்றது. இதில்‌ ஐ.ஏ.எஸ்‌., ஐ.பி.எஸ்‌, ஐ.எஃப்‌.எஸ்‌ அதிகாரிகள்‌ உள்பட 88 அரசு அதிகாரிகள்‌ பங்கேற்றனர்‌.

DOPT (Department of Personnel and Training) என அழைக்கப்படும்‌ இந்திய அரசு பணியாளர்‌ மற்றும்‌ பயிற்சித்‌துறை மற்றும் அதில்‌ பணியாற்றும்‌ அதிகாரிகளின்‌ மேம்பாட்டுக்காக இந்தியா மற்றும்‌ சர்வதேச பயிற்சி மையங்களால்‌ நடத்தப்படும்‌ பல்வேறு பயிற்சிகளை வழங்குகிறது. அதில்‌ ஈஷாவின்‌ “இன்னர்‌ இன்ஜினீயரிங்‌ லீடர்ஷிப்‌' பயிற்சியும்‌ ஒன்றாகும்‌. இந்த திட்டத்தின்‌ மூலம்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ அரசு அதிகாரிகள்‌ ஈஷாவின்‌ பயிற்சி வகுப்புகளில்‌ பங்கேற்று வருகின்றனர்‌.



அதன்படி, இந்தாண்டு நடந்த 5 நாள்‌ பயிற்சி வகுப்பில்‌ பங்கேற்ற அதிகாரிகளுக்கு 'ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா' என்ற சக்திவாய்ந்த யோகா கற்றுக்கொடுக்கப்பட்டது. அத்துடன்‌, உடல்‌ மற்றும்‌ மன நலனை மேம்படுத்துவதற்கான எளிமையான யோகப் பயிற்சிகளும்‌ கற்றுக்கொடுக்கப்பட்டன. அத்துடன்‌, சத்குருவுடனான தியான அமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்‌ நிகழ்விலும்‌ அரசு அதிகாரிகள்‌ பங்கேற்றனர்‌.

அரசு அதிகாரிகள்‌ மன அழுத்தம்‌ நிறைந்த சூழ்நிலைகளை சரியாகக் கையாள்வது, உள்நிலையில்‌ அமைதியையும்‌ முழுமையையும்‌ உணர்வது, மற்றவர்களுடனான நட்புறவை மேம்படுத்துவது, மனதில்‌ தெளிவு, உணர்ச்சியில்‌ சமநிலையை உருவாக்கி முடிவெடுக்கும்‌ திறனை மேம்படுத்துவது போன்றவை இந்த பயிற்சி வகுப்பின்‌ பிரதான நோக்கங்களாகும்‌.

மேலும்‌, அவர்கள்‌ இந்த வகுப்புகளில்‌ கற்றுக்கொடுக்கப்பட்ட பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருவதன்‌மூலம்‌ நீண்ட நாட்களாக அவர்கள்‌ சந்தித்துவரும்‌ உடல்‌ மற்றும்‌ மனரீதியான பிரச்‌சினைகளில்‌ இருந்தும்‌ விடுபட முடியும்‌.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...