கோவையில், ஓடும் பஸ்சிலிருந்து தவறி கீழே விழுந்த பெண் சாவு

கோவை: கோவையில், ஓடும் பஸ்சிலிருந்து தவறி கீழே விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.


கோவை: கோவையில், ஓடும் பஸ்சிலிருந்து தவறி கீழே விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

கோவை புலியகுளத்தைச் சேர்ந்தவர் ஆனந்தவேல். இவர் தனியார் மருத்துவமனையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மயிலாடுதுறையைச் சேர்ந்த தனிகா (வயது 28) என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் தனது குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தனது தங்கை மற்றும் உறவினருடன் மயிலாடுதுறை புறப்பட்டார்.

காந்திபுரத்தில் இருந்து சேலம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். பஸ் நீலாம்பூர் அருகே சென்றபோது தனிகாவுக்கு திடீரென வாந்தி வருவதுபோல் தோன்றியது. இதனால் அவர் பஸ் படிக்கட்டில் நின்றவாறு முகத்தைக் கழுவினார். அப்போது எதிர்பாராதவிதமாக தனிகாபடிக்கட்டிலில் இருந்து தவறி ரோட்டில் விழுந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் சத்தம் போட்டு பஸ்சை நிறுத்தினர்.பின்னர் கீழே விழுந்து படுகாயம் அடைந்த தனிகாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...