திருப்பூர்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய கல்யாணராமனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் நேற்று திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய கல்யாணராமனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் நேற்று திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முஸ்லிம்களின் இறைதூதர் நபிகள் நாயகத்தை பா.ஜ.க. நிர்வாகி கல்யாணராமன் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மைக்குழு தலைவர் சுலைமான், மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் பரீத் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில்நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசிவரும் கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

கல்யாணராமனை பாதுகாத்து வரும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முஸ்லிம்களின் இறைதூதர் நபிகள் நாயகத்தை பா.ஜ.க. நிர்வாகி கல்யாணராமன் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மைக்குழு தலைவர் சுலைமான், மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் பரீத் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில்நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசிவரும் கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
கல்யாணராமனை பாதுகாத்து வரும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.