நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் பஸ் நிலையம் அருகே உள்ள செல்போன் கடையின் பின்புறக் கதவை உடைத்து 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது. காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் பஸ் நிலையம் அருகே உள்ள செல்போன் கடையின் பின்புறக் கதவை உடைத்து 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது. காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம்குன்னூர் பஸ் நிலையம் அருகே உள்ள செல்போன் கடையின் பின்பக்க சுவற்றை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் கடையில் இருந்த சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை திருடிச் சென்றான்.

இது அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
குன்னூர் பஸ் நிலையம் அருகே நடந்த இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கடையின் முன்புறம் புறக்காவல் நிலையம் இருப்பதால் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளையும், கடையில் கிடைத்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் வைத்து கொள்ளையர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம்குன்னூர் பஸ் நிலையம் அருகே உள்ள செல்போன் கடையின் பின்பக்க சுவற்றை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் கடையில் இருந்த சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை திருடிச் சென்றான்.
இது அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
குன்னூர் பஸ் நிலையம் அருகே நடந்த இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கடையின் முன்புறம் புறக்காவல் நிலையம் இருப்பதால் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளையும், கடையில் கிடைத்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் வைத்து கொள்ளையர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.