கோவை: இஸ்லாமியர்கள் புனிதமாக போற்றும் நபிகள் நாயகத்தை, அவமதிக்கும் வகையில் பேசிய, பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், என்று கோவையில் பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: இஸ்லாமியர்கள் புனிதமாக போற்றும் நபிகள் நாயகத்தை, அவமதிக்கும் வகையில் பேசிய, பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், என்று கோவையில் பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரு தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் நபிகள் நாயகத்தை குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருந்தார். இது, இஸ்லாமிய மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தொடர் போராட்டம் மட்டும் கண்டனங்களை தொடர்ந்து, அன்று இரவே கல்யாணராமன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, உக்கடம் பகுதியில் கோவை மாவட்ட அனைத்து ஜமாத் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இரு தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் நபிகள் நாயகத்தை குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருந்தார். இது, இஸ்லாமிய மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தொடர் போராட்டம் மட்டும் கண்டனங்களை தொடர்ந்து, அன்று இரவே கல்யாணராமன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, உக்கடம் பகுதியில் கோவை மாவட்ட அனைத்து ஜமாத் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.