கோவை: உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி, கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல், புதிய வேலை ஆட்கள் நியமிப்பதற்கு தடை விதிக்க வேண்டும், என்று ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி, கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல், புதிய வேலை ஆட்கள் நியமிப்பதற்கு தடை விதிக்க வேண்டும், என்று ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதாரம் துப்புறவு பொது பணியாளர் சங்க பொதுச்செயலாளர் தமிழ்நாடு செல்வம் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சி சுகாதார துப்புரவு பணியில் சுகாதாரம், துப்புறவு கார்டனர், மலேரியா, டெங்கு கொசு ஒழிப்பு குடிநீர் விநியோகம், டிரைவர் கிளீனர்கள் என 3865 தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் தினக்கூலிகளாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தொழிலாளர்களுக்கு, நிரந்தர தொழிலாளர்களின் ஊதியம் வழங்கி வரைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதாரம் துப்புறவு பொது பணியாளர் சங்கம், ஜீவா சுகாதார தொழிலாளர், கோயம்புத்தூர் லேபர் யூனியன், ஏஐடியுசி, ஜனசக்தி லேபர் யூனியன் ஆகிய சங்கங்கள் கூட்டமைப்பாக இணைந்து கோவை தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலையில் தொழில் தாவா வழக்கு தாக்கல் செய்து நடத்தி வந்தது.
இதனிடையே, சுகாதார பிரிவில் 530 காலியிடங்கள் உள்ள நிலையில், வேலைக்கு ஆட்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எடுக்கப்படும், என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.
இதனையடுத்து, ஒப்பந்த தொழிலாளர் இருக்கும் போது அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், மாநகராட்சி புதிய வேலை ஆட்கள் நியமிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, இந்த வழக்கின் விசாரணை நடந்தது. அதில், மாநகராட்சி சார்பாக 530 காலி இடங்களுக்கு நேர்காணல் அதாவது இன்டர்வியூ நடத்தலாம், ஆனால் பணி நியமனம் செய்யக்கூடாது, என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கோவை மாநகராட்சியில் தினக்கூலி தொழிலாளர்களாக பணியாற்றும், எளிய மக்களுக்கு கிடைத்த ஒரு இடைக்கால வெற்றி என்றே கருதப்படுகிறது.
ஒப்பந்த தொழிலாளர்களை மாநகராட்சி நிர்வாகம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கான உரிய சலுகைகளை வழங்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதாரம் துப்புறவு பொது பணியாளர் சங்க பொதுச்செயலாளர் தமிழ்நாடு செல்வம் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சி சுகாதார துப்புரவு பணியில் சுகாதாரம், துப்புறவு கார்டனர், மலேரியா, டெங்கு கொசு ஒழிப்பு குடிநீர் விநியோகம், டிரைவர் கிளீனர்கள் என 3865 தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் தினக்கூலிகளாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தொழிலாளர்களுக்கு, நிரந்தர தொழிலாளர்களின் ஊதியம் வழங்கி வரைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதாரம் துப்புறவு பொது பணியாளர் சங்கம், ஜீவா சுகாதார தொழிலாளர், கோயம்புத்தூர் லேபர் யூனியன், ஏஐடியுசி, ஜனசக்தி லேபர் யூனியன் ஆகிய சங்கங்கள் கூட்டமைப்பாக இணைந்து கோவை தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலையில் தொழில் தாவா வழக்கு தாக்கல் செய்து நடத்தி வந்தது.
இதனிடையே, சுகாதார பிரிவில் 530 காலியிடங்கள் உள்ள நிலையில், வேலைக்கு ஆட்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எடுக்கப்படும், என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.
இதனையடுத்து, ஒப்பந்த தொழிலாளர் இருக்கும் போது அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், மாநகராட்சி புதிய வேலை ஆட்கள் நியமிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, இந்த வழக்கின் விசாரணை நடந்தது. அதில், மாநகராட்சி சார்பாக 530 காலி இடங்களுக்கு நேர்காணல் அதாவது இன்டர்வியூ நடத்தலாம், ஆனால் பணி நியமனம் செய்யக்கூடாது, என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கோவை மாநகராட்சியில் தினக்கூலி தொழிலாளர்களாக பணியாற்றும், எளிய மக்களுக்கு கிடைத்த ஒரு இடைக்கால வெற்றி என்றே கருதப்படுகிறது.
ஒப்பந்த தொழிலாளர்களை மாநகராட்சி நிர்வாகம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கான உரிய சலுகைகளை வழங்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.