கோவை: கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கோவை: கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேயசிவசேனாபதியைச் சந்தித்து அவர் முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.
இதையடுத்து நடைபெற்ற விழாவில் பேசிய சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் நம் மக்களையும், நம் மக்களின் வாழ்வாதாரத்தையும் எவ்வாறு முன்னேற்றினார்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்களால்தான் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தது.
நம் நாட்டை மோடி தலைமையிலான மத்திய அரசும், பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசும் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுத்து தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்துக்கொண்டுள்ளனர். இந்த அராஜகங்களுக்கெல்லாம் முடிவு கட்ட வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைய அயராது உழைப்போம். தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து, அதையே வழிமொழியும் விதமாகத் திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் தங்களை இணைத்துக்கொண்ட உடன்பிறப்புகள் அனைவரும் பணியாற்றிடவும், வரும் தேர்தலில் தி.மு.க.வை வெற்றிபெறச் செய்திடவும் உறுதியேற்றனர்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேயசிவசேனாபதியைச் சந்தித்து அவர் முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.
இதையடுத்து நடைபெற்ற விழாவில் பேசிய சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் நம் மக்களையும், நம் மக்களின் வாழ்வாதாரத்தையும் எவ்வாறு முன்னேற்றினார்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்களால்தான் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தது.
நம் நாட்டை மோடி தலைமையிலான மத்திய அரசும், பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசும் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுத்து தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்துக்கொண்டுள்ளனர். இந்த அராஜகங்களுக்கெல்லாம் முடிவு கட்ட வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைய அயராது உழைப்போம். தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து, அதையே வழிமொழியும் விதமாகத் திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் தங்களை இணைத்துக்கொண்ட உடன்பிறப்புகள் அனைவரும் பணியாற்றிடவும், வரும் தேர்தலில் தி.மு.க.வை வெற்றிபெறச் செய்திடவும் உறுதியேற்றனர்.