கோவை: 25 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: 25 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் மணி. முன்னாள் ராணுவ வீரரான இவரும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரைச் சேர்ந்த மஞ்சுநாதா என்பவரும் இணைந்து பிரபல சிமெண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை தருவதாக ஆசைவார்த்தை காட்டி விளம்பரம் செய்துள்ளனர்.
இதை நம்பி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். கோவை போத்தனூரைச் சேர்ந்த லாரா விண்ணரசி என்பவர் பல தவணைகளாக ரூபாய் 5.75 லட்சம் வரை செலுத்தியிருக்கிறார். ஆனால், அவருக்கு லாபத் தொகையை திருப்பித் தரவில்லை. இதையடுத்து அவர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் பலரிடம் மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, மணி, மஞ்சுநாதா ஆகிய இருவரும் ரூ. 25 கோடி வரை மோசடி செய்துள்ளது தெரிந்தது. இதையடுத்து கடந்தாண்டு மணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த மஞ்சுநாதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் மணி. முன்னாள் ராணுவ வீரரான இவரும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரைச் சேர்ந்த மஞ்சுநாதா என்பவரும் இணைந்து பிரபல சிமெண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை தருவதாக ஆசைவார்த்தை காட்டி விளம்பரம் செய்துள்ளனர்.
இதை நம்பி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். கோவை போத்தனூரைச் சேர்ந்த லாரா விண்ணரசி என்பவர் பல தவணைகளாக ரூபாய் 5.75 லட்சம் வரை செலுத்தியிருக்கிறார். ஆனால், அவருக்கு லாபத் தொகையை திருப்பித் தரவில்லை. இதையடுத்து அவர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் பலரிடம் மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, மணி, மஞ்சுநாதா ஆகிய இருவரும் ரூ. 25 கோடி வரை மோசடி செய்துள்ளது தெரிந்தது. இதையடுத்து கடந்தாண்டு மணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த மஞ்சுநாதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.