குன்னூரில் வங்கி ஏடிஎம் காவலாளியிடம் செல்போன் திருடிய மூன்று பேர் கைது!

நீலகிரி: குன்னூர் மவுண்ட்ரோடு பகுதியில் உள்ள வங்கியின் ஏடிஎம்மில் பணிபுரியும் காவலாளியிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


நீலகிரி: குன்னூர் மவுண்ட்ரோடு பகுதியில் உள்ள வங்கியின் ஏடிஎம்மில் பணிபுரியும் காவலாளியிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குன்னூர் மவுண்ட்ரோட்டில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் செக்யூரிட்டியாக பணியாற்றுபவர் நட்ராஜ். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு பணியில் இருந்த போது, அவருக்கு தெரியாமல் அவர் கழற்றி வைத்திருந்த ஜர்க்கினில் இருந்து செல்போன் மற்றும் அதிலிருந்த நூறு ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் ஒருவர் திருடிச் சென்றனர்.

இது குறித்து குன்னூர் காவல் நிலையத்தில் நட்ராஜ் புகார் அளித்ததைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் மணிவண்ணன் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சூர்யா(17) காளியப்பன்(16) மற்றும் கௌதம்(19) ஆகியோர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இன்று 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர். அவர்கள் மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.

இதில் சூர்யா மற்றும் காளியப்பன் ஆகியோர் சிறுவர்கள் என்பதால் இவர்களை கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...