திருப்பூர்: உடுமலையில் புதிதாக துவங்கப்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையத்தில், இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்பூர்: உடுமலையில் புதிதாக துவங்கப்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையத்தில், இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம்புதூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வேதியியல் ஆய்வக வகுப்பறை கட்டிடத்தை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார். பின்னர் அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இதையடுத்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, தமிழகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக பறவை காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாக கூறினார்.
உடுமலைப்பேட்டையில் புதிதாக தொடங்கப்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையத்தில், தற்போது 33 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த சுற்றில் மீதமுள்ள 7 இடங்களும் நிரப்பப்பட்டு, விரைவில் வகுப்புகள் துவங்கப்படும் என்றும், யானைகள் புத்துணர்வு முகாமிற்கு அனைத்து விதமான மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.
மேலும், கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முட்டை மற்றும் கறிக்கோழி சிறந்த உணவாக இருந்ததாக மத்திய அரசு கூறியுள்ளது. அதிகளவில் அண்டை மாநிலமான கேரளாவுக்கு முட்டை மற்றும் கோழிகளை அனுப்பி வருகிறோம். பொதுமக்கள் எந்த அச்சமுமின்றி ஊட்டச்சத்து நிறைந்த முட்டை, கறிக்கோழிகளை உணவாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம்புதூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வேதியியல் ஆய்வக வகுப்பறை கட்டிடத்தை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார். பின்னர் அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இதையடுத்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, தமிழகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக பறவை காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாக கூறினார்.
உடுமலைப்பேட்டையில் புதிதாக தொடங்கப்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையத்தில், தற்போது 33 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த சுற்றில் மீதமுள்ள 7 இடங்களும் நிரப்பப்பட்டு, விரைவில் வகுப்புகள் துவங்கப்படும் என்றும், யானைகள் புத்துணர்வு முகாமிற்கு அனைத்து விதமான மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.
மேலும், கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முட்டை மற்றும் கறிக்கோழி சிறந்த உணவாக இருந்ததாக மத்திய அரசு கூறியுள்ளது. அதிகளவில் அண்டை மாநிலமான கேரளாவுக்கு முட்டை மற்றும் கோழிகளை அனுப்பி வருகிறோம். பொதுமக்கள் எந்த அச்சமுமின்றி ஊட்டச்சத்து நிறைந்த முட்டை, கறிக்கோழிகளை உணவாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.