பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட அலெக்ஸாண்ட்ரியா என்ற மலைக் கிளிகளை விற்ற 2 பேருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட அலெக்ஸாண்ட்ரியா என்ற மலைக் கிளிகளை விற்ற 2 பேருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையம் அருகே தடைசெய்யப்பட்ட அலெக்ஸாண்ட்ரியா என்ற மலைவாழ் கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் ஆரோக்கியராஜ்சேவியர் உத்தரவின்பேரில் வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர்அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வனத்துறையால் தடைசெய்யப்பட்ட 9 கிளிகளை அனீஸ் மோகன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் விற்பனைக்காக வைத்திருந்தனர். அவர்களை உடனடியாக பொள்ளாச்சி வன அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடமிருந்து தலா 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்து கிளிகளைப் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுபோன்ற தடை செய்யப்பட்ட வனவிலங்குகள் மற்றும் பறவைகளை பொதுமக்கள் வாங்கி தங்கள் வீடுகளில் வளர்த்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும், மீறி யாராவது விற்றால் உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டுமென்றும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.
பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையம் அருகே தடைசெய்யப்பட்ட அலெக்ஸாண்ட்ரியா என்ற மலைவாழ் கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் ஆரோக்கியராஜ்சேவியர் உத்தரவின்பேரில் வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர்அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வனத்துறையால் தடைசெய்யப்பட்ட 9 கிளிகளை அனீஸ் மோகன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் விற்பனைக்காக வைத்திருந்தனர். அவர்களை உடனடியாக பொள்ளாச்சி வன அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடமிருந்து தலா 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்து கிளிகளைப் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுபோன்ற தடை செய்யப்பட்ட வனவிலங்குகள் மற்றும் பறவைகளை பொதுமக்கள் வாங்கி தங்கள் வீடுகளில் வளர்த்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும், மீறி யாராவது விற்றால் உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டுமென்றும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.