கோவை: சசிகலா விவகாரம் அ.தி.மு.க. சம்பந்தப்பட்டது என்று பா.ஜ.க. மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை: சசிகலா விவகாரம் அ.தி.மு.க. சம்பந்தப்பட்டது என்று பா.ஜ.க. மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை மக்கள் சேவை மையம் மற்றும் சக்சம் அமைப்பும் இணைந்து மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மோடி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை ராம்நகரில் கோவையில் மக்கள் சேவை மையம் சார்பில் பிரதமரின் இன்சூரன்ஸ் திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு முதல் தவணை கட்டி இணைப்பது மற்றும் இலவச கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இவற்றைப் பார்வையிட்ட பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், `மக்களுக்கான தேவையறிந்து சேவைகளைச் செய்வதிலேயே கோவை மக்கள் சேவை மையம் முதன்மையான நோக்கம் கொண்டிருக்கிறது' என்றார். அப்போது சசிகலா விடுதலை குறித்து கேட்டபோது, சசிகலாவின் வருகை என்பது அ.தி.மு.க.வுக்கும், அவருக்குமான உறவு சம்பந்தப்பட்டது என்றார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசும்போது, தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க. தலைமை வகிப்பதாகவும் தேர்தலை இரு கட்சிகளும் இணைந்து சந்திக்க உள்ளோம். மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட சிறுபான்மை அமைப்பு தாக்குதல் நடத்தியது வன்மையான கண்டனத்துக்குரியது. காவல்துறை அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கோவை மக்கள் சேவை மையம் மற்றும் சக்சம் அமைப்பும் இணைந்து மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மோடி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை ராம்நகரில் கோவையில் மக்கள் சேவை மையம் சார்பில் பிரதமரின் இன்சூரன்ஸ் திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு முதல் தவணை கட்டி இணைப்பது மற்றும் இலவச கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இவற்றைப் பார்வையிட்ட பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், `மக்களுக்கான தேவையறிந்து சேவைகளைச் செய்வதிலேயே கோவை மக்கள் சேவை மையம் முதன்மையான நோக்கம் கொண்டிருக்கிறது' என்றார். அப்போது சசிகலா விடுதலை குறித்து கேட்டபோது, சசிகலாவின் வருகை என்பது அ.தி.மு.க.வுக்கும், அவருக்குமான உறவு சம்பந்தப்பட்டது என்றார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசும்போது, தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க. தலைமை வகிப்பதாகவும் தேர்தலை இரு கட்சிகளும் இணைந்து சந்திக்க உள்ளோம். மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட சிறுபான்மை அமைப்பு தாக்குதல் நடத்தியது வன்மையான கண்டனத்துக்குரியது. காவல்துறை அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.