கோவை: பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன் கைது செய்யப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் கல்யாணராமனை விடுதலை செய்யுமாறு அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை: பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன் கைது செய்யப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் கல்யாணராமனை விடுதலை செய்யுமாறு அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தி எஸ்.டி.பி.ஐ. மற்றும் பி.எஃப்.ஐ. சார்பில் பேசியதைக் கண்டித்தும், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதைக் கண்டித்தும்நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கலந்துகொண்டு பேசினார்.
கல்யாணராமன் பேச ஆரம்பித்தபோது கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் மேற்கண்ட இஸ்லாமிய அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்து பிரச்சினை செய்துள்ளனர். ஆனால் காவல்துறை அவர்களை அகற்றவோ அல்லது கைது செய்யவோ யோசிக்கவில்லை.
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் முடிந்து ஒரு இல்லத்தில் உணவருந்திக் கொண்டிருந்த கல்யாணராமனை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அனுமதி பெறப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அத்துமீறியதுடன் பிரதமர் மோடியை இழிவாக பதிவிட்ட இஸ்லாமியர்களை கைது செய்யாத காவல்துறைகல்யாணராமனை மட்டும் கைது செய்ததில் இருக்கும் மர்மம் என்ன?
கல்யாணராமனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் கேட்டுக்கொள்கிறேன். போராட்டத்தைத் தூண்டாதீர்கள், இந்து விரோத செயல்களுக்கு துணை போகாதீர்கள். பா.ஜ.க.மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், முன்னாள் நகரமன்ற தலைவர் சதீஷ் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ள தமிழக காவல்துறையைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள இந்து தலைவர்கள் கல்யாணராமன், சதீஷ் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியும் தமிழகம் முழுக்க இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஜனநாயக வழியில் அறப் போராட்டங்கள் நடைபெறும்.
இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தி எஸ்.டி.பி.ஐ. மற்றும் பி.எஃப்.ஐ. சார்பில் பேசியதைக் கண்டித்தும், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதைக் கண்டித்தும்நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கலந்துகொண்டு பேசினார்.
கல்யாணராமன் பேச ஆரம்பித்தபோது கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் மேற்கண்ட இஸ்லாமிய அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்து பிரச்சினை செய்துள்ளனர். ஆனால் காவல்துறை அவர்களை அகற்றவோ அல்லது கைது செய்யவோ யோசிக்கவில்லை.
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் முடிந்து ஒரு இல்லத்தில் உணவருந்திக் கொண்டிருந்த கல்யாணராமனை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அனுமதி பெறப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அத்துமீறியதுடன் பிரதமர் மோடியை இழிவாக பதிவிட்ட இஸ்லாமியர்களை கைது செய்யாத காவல்துறைகல்யாணராமனை மட்டும் கைது செய்ததில் இருக்கும் மர்மம் என்ன?
கல்யாணராமனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் கேட்டுக்கொள்கிறேன். போராட்டத்தைத் தூண்டாதீர்கள், இந்து விரோத செயல்களுக்கு துணை போகாதீர்கள். பா.ஜ.க.மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், முன்னாள் நகரமன்ற தலைவர் சதீஷ் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ள தமிழக காவல்துறையைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள இந்து தலைவர்கள் கல்யாணராமன், சதீஷ் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியும் தமிழகம் முழுக்க இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஜனநாயக வழியில் அறப் போராட்டங்கள் நடைபெறும்.