மிக்சோபதிக்கு எதிராக கோவையில் ஐ.எம்.ஏ. 14 நாள் உண்ணாவிரதம்: இன்று தொடங்கியது!

கோவை: கோவை ஐ.எம்.ஏ. சார்பில் மிக்சோபதிக்கு எதிரான 14 நாள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று தொடங்கியது.



கோவை: கோவை ஐ.எம்.ஏ. சார்பில் மிக்சோபதிக்கு எதிரான 14 நாள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று தொடங்கியது.

அலோபதி மருத்துவர்கள் அல்லாத சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவம் படித்தவர்களும் 56 வகையான அறுவை சிகிச்சை செய்யலாம் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவத்துடன் அலோபதி மருத்துவமும் இணைந்து மிக்சோபதி என்ற மருத்துவமுறை மூலம் சிகிச்சை அளிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை கூறியது. இந்த புதிய மருத்துவ முறையால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று கூறி அந்த சட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மிக்சோபதிக்கு எதிரான இந்திய மருத்துவ சங்கத்தின் இந்தப் போராட்டம் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் ஐ.எம்.ஏ. எனப்படும் இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது.



இன்று தொடங்கும் இந்தப் போராட்டம் வரும் 14-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உண்ணாவிரதத்தில் மகளிர் பிரிவு மருத்துவர்கள் சங்கம் மற்றும் மாணவர் பிரிவைத் தவிர ஐ.டி.ஏவும் உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு இந்திய பல் மருத்துவ சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...