டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் தி.மு.க. இருசக்கர வாகன பேரணி!

கோவை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், போராட்டத்தின்போது விவசாயிகளைத் தாக்கிய மத்திய அரசைக் கண்டித்தும் கோவையில் தி.மு.க. சார்பில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.


கோவை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், போராட்டத்தின்போது விவசாயிகளைத் தாக்கிய மத்திய அரசைக் கண்டித்தும் கோவையில் தி.மு.க. சார்பில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டத்தின்போது விவசாயிகளைத் தாக்கிய மத்திய அரசைக் கண்டித்தும், தமிழகத்தில் அறவழியில் போராடிய விவசாயிகள்மீது பொய்வழக்கு பதிவு செய்த தமிழக அரசைக் கண்டித்தும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.



3,000-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களுடன் கலந்துகொண்ட இந்தப் பேரணி பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்தில் துவங்கி பன்னிமடை, சின்னத்தடாகம், கணுவாய், துடியலூர், இடிகரை, அத்திப்பாளையம், கீரணத்தம், கொண்டையம்பாளையம் வழியாக வையம்பாளையம் கிராமத்தில் உள்ள தமிழக விவசாயிகளின் பாதுகாவலர் சி.நாராயணசாமி நாயுடு நினைவு மணி மண்டபம் வரை சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது. இதையடுத்து பேரணி நிறைவடைந்தது.



கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் மாவட்ட தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், பகுதி - ஒன்றிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், பேரூர், வட்ட, கிளை கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், செயல்வீரர்கள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...