கோவை: கொரோனா வைரஸ் தடுப்பூசி கடந்த 16-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் போடப்பட்டு வருகிறது. அதன்படி, கொரோனா தடுப்பு பணியில் முன் கள பணியாளர்களாக உள்ள சுகாதாரத் துறையை சேர்ந்த ஆயிரத்து 7, 826 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கோவை: கொரோனா வைரஸ் தடுப்பூசி கடந்த 16-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் போடப்பட்டு வருகிறது. அதன்படி, கொரோனா தடுப்பு பணியில் முன் கள பணியாளர்களாக உள்ள சுகாதாரத் துறையை சேர்ந்த ஆயிரத்து 7, 826 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், போலீசார், வருவாய்த்துறை, மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி ஆகிய துறை அலுவலர்கள், சுகாதார பணியாளர்களுக்கு இன்று திங்கட்கிழமை முதல் தடுப்பூசி போடப்பட உள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட அதிகாரி கூறும்போது : கோவை மாவட்டத்தில் மருத்துவத் பணியாளர்கள் தவிர்த்து, போலீசார், வருவாய் துறை உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன் களப்பணியாளர்கள் 22,000 பேர் தடுப்பூசி போட பதிவு செய்துள்ளனர்.
அவர்களுக்கு, மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாநகராட்சியில் 10 இடங்களில் கோவை மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளில் தடுப்பு ஊசிகள் போடப்படும், என்று அவர் கூறினார்.
இந்நிலையில், போலீசார், வருவாய்த்துறை, மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி ஆகிய துறை அலுவலர்கள், சுகாதார பணியாளர்களுக்கு இன்று திங்கட்கிழமை முதல் தடுப்பூசி போடப்பட உள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட அதிகாரி கூறும்போது : கோவை மாவட்டத்தில் மருத்துவத் பணியாளர்கள் தவிர்த்து, போலீசார், வருவாய் துறை உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன் களப்பணியாளர்கள் 22,000 பேர் தடுப்பூசி போட பதிவு செய்துள்ளனர்.
அவர்களுக்கு, மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாநகராட்சியில் 10 இடங்களில் கோவை மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளில் தடுப்பு ஊசிகள் போடப்படும், என்று அவர் கூறினார்.