பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று இரவு பாஜகவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று இரவு பாஜகவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
முன்னதாக, அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில்:
சசிகலா விடுதலை குறித்து கருத்து கூறும் நிலையில் பாஜக இல்லை, அதிமுகவுடன் அமைந்துள்ள கூட்டணி குறித்து பாஜக நிர்வாகி ஜே.பி நட்டா தெளிவாக அறிவித்துள்ளார். அப்படி இருக்கும் பட்சத்தில், சசிகலா விடுதலை குறித்து என்ன நடக்கும் என்பது பற்றி பாஜகவுக்கு தொடர்பு கிடையாது. இதற்கு அதிமுக தான் கருத்து கூற வேண்டும். இது தொடர்பான முடிவு எடுக்க வேண்டிய தகுதி அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது.
என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக பலம் வாய்ந்தவர்களாக உள்ளனர். தமிழகத்தில் ஒரு பெரிய கட்சி அதிமுக, அவர்கள் அறிவித்த வேட்பாளரே முதல்வர் வேட்பாளராக இருப்பார். இதில், பாஜகவுக்கு எந்தவித குழப்பமும் இல்லை. அதிமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் ஆட்சியில் அமரும். எல்லா அரசியல் தலைவர்களுக்கும் தங்களது கட்சி சார்பாக கருத்துக்கள் கூற உரிமை உள்ளது.
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினைப் பொறுத்தவரை கால் சென்டர் மூலமாக முன்னதாகவே ஒரு லட்சம் புகார்களை வாங்கியுள்ளார். அதற்கான, வெள்ளை அறிக்கையை அவர் இதுவரை வெளியிடப்படவில்லை. கிராம சபை தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதற்கும் எந்தவித விளக்கமும் இல்லை.
இந்நிலையில், தற்போது மூன்றாவதாக புகார் பெட்டி வைக்கும் திட்டத்தை அறிவித்து உள்ளார். இதே போன்ற நாடகங்களை போன சட்டமன்றத் தொகுதி தேர்தலில், ஏற்கனவே பின்பற்றி உள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது மக்கள் மத்தியில் திமுக வெற்றி வாய்ப்பையும், நம்பிக்கையையும் இழந்து விட்டார்கள், என்பது தெளிவாக தெரிகிறது, என்றார்.
முன்னதாக, அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில்:
சசிகலா விடுதலை குறித்து கருத்து கூறும் நிலையில் பாஜக இல்லை, அதிமுகவுடன் அமைந்துள்ள கூட்டணி குறித்து பாஜக நிர்வாகி ஜே.பி நட்டா தெளிவாக அறிவித்துள்ளார். அப்படி இருக்கும் பட்சத்தில், சசிகலா விடுதலை குறித்து என்ன நடக்கும் என்பது பற்றி பாஜகவுக்கு தொடர்பு கிடையாது. இதற்கு அதிமுக தான் கருத்து கூற வேண்டும். இது தொடர்பான முடிவு எடுக்க வேண்டிய தகுதி அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது.
என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக பலம் வாய்ந்தவர்களாக உள்ளனர். தமிழகத்தில் ஒரு பெரிய கட்சி அதிமுக, அவர்கள் அறிவித்த வேட்பாளரே முதல்வர் வேட்பாளராக இருப்பார். இதில், பாஜகவுக்கு எந்தவித குழப்பமும் இல்லை. அதிமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் ஆட்சியில் அமரும். எல்லா அரசியல் தலைவர்களுக்கும் தங்களது கட்சி சார்பாக கருத்துக்கள் கூற உரிமை உள்ளது.
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினைப் பொறுத்தவரை கால் சென்டர் மூலமாக முன்னதாகவே ஒரு லட்சம் புகார்களை வாங்கியுள்ளார். அதற்கான, வெள்ளை அறிக்கையை அவர் இதுவரை வெளியிடப்படவில்லை. கிராம சபை தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதற்கும் எந்தவித விளக்கமும் இல்லை.
இந்நிலையில், தற்போது மூன்றாவதாக புகார் பெட்டி வைக்கும் திட்டத்தை அறிவித்து உள்ளார். இதே போன்ற நாடகங்களை போன சட்டமன்றத் தொகுதி தேர்தலில், ஏற்கனவே பின்பற்றி உள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது மக்கள் மத்தியில் திமுக வெற்றி வாய்ப்பையும், நம்பிக்கையையும் இழந்து விட்டார்கள், என்பது தெளிவாக தெரிகிறது, என்றார்.